Daily Archives: ஒக்ரோபர் 15, 2010

ஞானமடா நீயெனக்கு 65

நீ மூத்தவன் ஆனதையும் நாங்கள் இரண்டாம் முறையாய் – பெற்றோர் ஆனதையும் – இன்று தெரிந்து கொண்டு அவள் வயிற்றில் கை வைத்து – செல்லமே நல்லா இருக்கீங்களா……….’ என்று புன்னகைத்ததும் – நீ இங்கும் அங்கும் திரும்பி பார்த்துவிட்டு உனை கொஞ்சும் அந்த வார்த்தையில் – நான் யாரை கொஞ்சுகிறேனோ என்று பார்த்து விட்டு … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 64

அது எப்படியோ – மூத்த பிள்ளை இளைய பிள்ளையால் சலித்துவிடும் என்கிறார்கள்; எனக்கு நூற்றியோர் பிள்ளைகள் பிறந்தாலும், நீயும் சலிக்கமாட்டாய் – மீதம் – நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’ என்று தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 63

ஒவ்வொரு பெற்ற வயிறும் வளர்த்த தோளும் தன் குழந்தைக்கான அன்பையும் ஆசைகளையும் எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை; தேடி வைத்திருந்தால் – ஒவ்வொரு வீட்டிலும் ஞானமடா நீயெனக்கும் – ஞானமடி நீயெனக்கும் – நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக