மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)

காலம் போகுது வா வா வா..
மெல்ல மெல்லப்போகுது எழுந்து வா..
காற்றைப் போலக்கிளம்புவோம் வா வா
உலகமெங்கும் பரவுவோம் வா வா வா..

(காலம் போகுது..)

ஊழல் லஞ்சம் ஒழியனும்
பேரு நிலைக்க வாழனும்
ஏழைமக்கள் வருத்தமெண்ணி
வாழ்க்கை நமக்கு அமையனும்!

(காலம் போகுது..)

ஊட்டச்சத்துச் சோறுண்ணு
இரவுநேரம் உறங்கனும்
விடியும் காலை விளையாடி – நம்
தமிழர் வீரம் மீட்டனும்!

(காலம் போகுது..)

ஆங்கிலமும் கற்கனும்
அடுத்த மொழிகள் தெரியனும்
தாயை வணங்கும் பிள்ளைப்போல
தமிழை உயிராய் மதிக்கணும்!

(காலம் போகுது..)

சங்கக காலம் தெரியனும்
தமிழர் வரலாறும் படிக்கனும்
ஆண்டத் தமிழன் வீரத்தோட
விட்ட மண்ணைப் பறிக்கனும்!

(காலம் போகுது..)

வாழ்க்கை யொன்னும் நிலையில்லை
போகும் பாதை கொடிதில்லை
கொடுத்து வாழப் பழகிட்டா
மனிதம் நிலைக்க மகிழலாம்!!

(காலம் போகுது..)
—————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)

  1. // கொடுத்து வாழப் பழகிட்டா… //

    சிறப்பான வரிகள் ஐயா…

    Like

பின்னூட்டமொன்றை இடுக