Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

  என்றோ எவனோ வீசிய எச்சில் இலைகளைத் தின்று உயிர்க்கும் – பிச்சைக்காரி “பாவம், தின்னட்டும்” குரல் கொடுக்கும் கனவான்கள் உண்டு வைத்ததை தின்று மீந்ததை ஈந்து – சில நாய்களோடு சொந்தம் சேர்வாள் நன்றிப் பெருக்கால் நாய்களும் அவள் பின்செல்லும் இருளைப் போர்த்தியவள் உறங்கும் இரவுகளில் – நாய்கள் துணை தேடித் தெருவிற்குள்  செல்லும் … Continue reading

Posted in அணிந்துரை, வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்!!

பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!! தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும் (சிறுகதை) மாதிரி!

அத்தை  அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள் நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன், “திங்கள் கிழமையில்ல இன்னைக்கு” என்றாள் அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் நீங்க போயிட்டு வாங்க என்றேன். “இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?” … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!

  தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி  சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் – அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது!!

  உறவுகளுக்கு வணக்கம், இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே போட்டிகள் அறிவித்து, விழாவில் நூறு கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு கவிமாமணி விருதும், நூறு எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து இலக்கியச் செம்மல் விருதும், நூறு கட்டுரையாளர்களுக்கு தமிழ்மாமணி விருதும் என படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து இன்னும் பல சேவை சார்ந்த விருதுகளும் வழங்குவதாக அறிவித்தமை கண்டு நம் படைப்புக்களும் அனுப்பி … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 26 பின்னூட்டங்கள்