17, மதங்கொண்ட மனிதா மனிதம் கொள்!

woman crying 1

 

 

 

 

 

 

 

 

 

ணவு செய்தோம்
ஆடை நெய்தோம்
வீடு கட்டினோம்
வாகனம் தயாரித்தோம்
வசதிகளை பெருக்கினோம்
விண்ணையும் மண்ணையும்
ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம்

எல்லாவற்றிலும்
மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது

மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய
மண்ணில்
மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப
மாறி இருப்பதன் யதார்த்தத்தில்
எப்படி
சுயத்தை திணிக்கிறோம்?

இது நீ
இது நான்
அவ்வளவு புரிந்திருந்திருந்தால்
ரத்தத்தில் நம்
பூமி நனைந்திருக்காது..

வெட்டிய தலைக்கு
வெற்றி நிகழ்ந்திருக்காது

வெட்டும் கைகளில்
கண்ணீர் சொட்டப் பார்
நீயும் நானும் வேறு வேறா?

உனது நோக்கமும்
எனது நோக்கமும் வேறு வேறா ?

நீ எதை நோக்கிப் புறப்பட்டாயோ
அதை அடையத் தானே நானும் பயணிக்கிறேன் (?)
பிறகு ஏன்
உனக்கும் எனக்கும் மதவாதம்?

நீ வேறு சட்டை போட்டிருக்கிறாய்
நான் வேறு போட்டிருக்கிறேன்
நமக்கு
ஆடை அணிவித்தவர்கள் நாமாக இருக்கலாம்,
ஆடை செய்தவர்கள் நாமல்லவே (?)

ஒவ்வாமை உண்டெனில்
சீர் செய்தல் நியாயமா
உடம்பை அறுத்தல் நியாயமா?

சிந்தியுங்கள்

சிந்தியுங்கள் தோழர்களே
மதம் வேண்டுமோ வேண்டாமோ
அது அவரவர் மனது ஏற்றதன் புரிதல்படி
இருந்துபோகட்டும் –

ஆனால் உயிர் வேண்டும்
வாழ்தல் எல்லோருக்குமே வரம்
இறப்பு எல்லோருக்குமே பொது
போனால் –
திரும்ப கிடைக்காத உயிர்
வாழும் அத்தனைப்பேருக்குமே பெரிது..

பர்மாவில் இல்லை
எங்கே யார் யாரைக் கொன்றாலும்
கொலையை மிஞ்சியதொரு
பாதகமில்லை,

மீட்க முடியாததை
தொலைப்பதற்கு யாருக்கிங்கே உரிமையுண்டு?

போடுங்கள்
அத்தனைப்பேருமே
ஆயுதங்களைப் போட்டுவிடுங்கள்,

கடவுள் என்பது ஒரு தெளிவு நிறையும் புள்ளி
நிறைவு புரியுமிடம்
சமநிலை கலையாத பொது
சரிசமம்
நடுநிலை
நடுநிலை என்பதே ‘வேண்டிய அறிவின் முக்தி
பிறஉயிர் காத்தலே பொதுநிலை
இறைநிலை
இறைநிலைக்கு
பொது நிலைக்கு உயிர் கொடுக்கலாமா?

உயிர் எவ்வளவு பெரிது தெரியுமா?
தெரியவேண்டுமெனில்
செய்யவேண்டாம் சிந்தித்துப் பாருங்கள்
உங்கள் கைகளால் உங்களின் தாயை
வெட்ட முடியுமா ?
உங்கள் கைகளால்
உங்களுடையப் பிள்ளையை சுட்டுக் கொல்ல கைவருமா?
வராதில்லையா ?
வராதெனில் அதுதான் ஒரு உயிரின் விலை

அதை எடுக்க
எதற்கும்
யாருக்குமே உரிமையில்லை

கடவுள் மதம் எல்லாமே
கற்றறிந்த அறிவு படி -நாம்
கற்றுக் கொண்டது தான்., ஆனால்
உயிர் கற்றது அல்ல மாற்றிக்கொள்ள
பெற்றது
பெற்றதை பேணிக்காப்பதே
பொதுக்கடன்
அழிப்பதல்ல..,

கண்டிப்பாக யாரையும்
அழிப்பதல்ல..
————————————————–
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்..

1715813571
ம் தெருமுனை
தேனீர் கடையோரம்
அமர்ந்திருப்போம்,

என் கடையில் தேனீர்
அருந்தாமல் இவனுக்கு பொழுதே
விடியாதென்பார் கடைக்காரர்,

உனக்குத்தானே தெரியும்
உன்னை காணாதெனக்கு
விடியாது பொழுதென்று..
————————————————————-

2
ரை குடம்
தண்ணி பிடிக்கவா
அடிக்கடி வந்தாய் என்பாள்
குழாயடியில் அந்தக்கா

தூக்க முடியலக்கா என்பாய்
அக்காவிடம்

ஆமாமாம்
இதயம் ரொம்ப கனமென்பாள்
அந்தக்கா
எனைப் பார்த்துக்கொண்டே..
————————————————————-

3
லையிலிருந்து பூ
விழும்
எடுத்துத் தொடுக்க குனிகையில்
எனைப் பார்த்துவிடுவாய்

எடுக்காமலே போவாய்

நமக்கும் காதல் வரும்

திருமணம் நடக்கும்

திரைப்படம் பார்க்கப்போவோம்

படத்தில் நாயகி வருவாள்

ஒற்றை ரோசா கீழே விழும்

அவன் ஓடிவந்து எடுப்பான்
நாயகியைப் பார்ப்பான்

அங்கே பாடல் வரலாம்
வராமலும் போகலாம்

நமக்கு இரவு வரும்
நீ வந்து படுக்கும் முன்
அந்த உன் தலையிலிருந்து கீழே விழுந்த
மலரெடுத்து மேசையில் வைத்துவிட்டு
வேறுபுறம் திரும்பி படுத்துக்கொள்வேன்

நீ அந்த வாடிய மலரையெடுத்துப்
பார்ப்பாய்
என்னையும் பார்ப்பாய்
அந்த வாடிய மலர்
இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்படி மணக்கும்..
————————————————————-

4
தெ
ருவில் விற்கும்
சுண்டல் தின்னாதே என்று
அம்மா தினந்தினம் திட்டுவாள்,

தெருவில் போகும்
உன்னை காணவென்று
அம்மாவிற்குச் சொல்வதெப்படி ?

அம்மா பேசட்டுமென
அடுத்தநாளும் – அதே கடையில்
சுண்டல் வாங்கி அமர்ந்திருப்பேன்

நீ தூர இருந்து வர வர
சுண்டலில் வரும் ஆவிபோல
ஊரெல்லாம் நம் சேதி பரவும்

ஊராருக்கென்ன வேலை, அவர்கள்
உன்னையும் என்னையும்
பார்த்து பார்த்து
வீட்டிற்கு வீடு பத்தவைப்பார்கள்,

எப்படியோ எரியட்டும் நம்
காதல் ஜோதியென – நான்
தினம் தினம் சுண்டல் வாங்க வருகிவேன்

நாளாக நாளாக நீ
முழு பாவாடையிலிருந்து
அரை புடவைக்கு மாறிவிட்டாய்

எனக்கும்
சுண்டல் பிடிக்காமல்
பஜ்ஜியும்
பஜ்ஜி போய்
பகோடாவும்
பக்கோடாவிற்கு பிறகு போண்டாவும் மாறிவிட்டது

ஆனால் –
நீ மட்டும் மனதிற்குள்
மாறாதிருக்கிறாய்,
காதலெப்போதும் உள்ளே கனன்றே கிடக்கிறது..
————————————————————-

5
நீ
தலையை
நேராகவும்
பக்கமாகவும் வாரி வருவாய்

கண்ணில்
கூடியும் குறைத்தும்
மையிடுவாய்

ரோஜா கூட
தலையில் ஒன்றாகும்
இரண்டாகும்

ஆனால் உன் –
புன்னகை மட்டும் உதட்டில்
அப்படியே இருக்கும்

அந்தப் புன்னகைக்குத் தான்
இந்த இதயம் பரிசு

அந்தப் புன்னகைக்குத் தான்
இந்த கவிதையும் பரிசு
————————————————————-
வித்யாசாகர்

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

buddha-e1320762532562
1
ச்சீ
உயிர்சுடுமெனில்
விட்டுவிடுங்கள்
மதத்தை..
———————————————————————

2
அப்படி என்ன
சாமி வேண்டிக்கிடக்கு
மனிதர்களைக்
கொன்றப்பின்..
———————————————————————

3
சுடாதே
சுடாதே
நிறுத்து
மதத்திற்கென சுடுவாயெனில்
உன்னைச் சுட்டுக் கொல்!
———————————————————————

4
யாரடா
யாரையடா வெட்டுகிறாய்
நீ வெட்டுவது
உன்னைப்போலவே மதத்தை நம்பும்
இன்னொரு
அப்பாவியை தானே.. (?)
———————————————————————

5
அவனுடைய மதத்தை விட்டு
அவனை வெட்டினால்
நீயும் கொலைகாரனே..
———————————————————————

6
வாத்திப் பையன்
மக்கு என்பார்கள்,
புத்தரின் பக்தர்களில்
சிலரும்
அதற்கிங்கே சான்று..
———————————————————————

7
பார்த்தியா
மதம் என்றதும்
அதும் உன் மதம் என்றதும்
மனிதர்களையே மாய்க்கிறாய்

இது தான் நீ, மனிதா

உன்னை சுனாமி கொன்றாலென்ன ?
பூகம்பம் கொன்றாலென்ன ?

ஒருவேளை
அவைகள் வராமல் விட்டுவிட்டாலும்
நீ போதும் உன்னினத்தைக்
கொன்று குவிப்பதற்கு..
———————————————————————

8
மதத்தை மதிப்பவன்
தானே மதத்திற்குப் போராடவேண்டும் ?

நீ ஏன்?
———————————————————————

9
எல்லா உயிர்களிடத்தும்
அன்பு செலுத்தவேண்டும்
ஆனால்
இஸ்லாமியரை மட்டும்
கொன்றுகுவிக்க வேண்டும்

என்று கனவில் வந்து
கட்டளையிட்டது யார்..?
———————————————————————

10
நீ துரத்துவது
வெட்டுவது
கொல்லுவது
குழந்தைகளையும் பெண்களையுமா.,

ரத்தக்கறை
உனது காவித்துணியை
நிறம் கருகச் செய்கிறது பார்..
———————————————————————

11
இரக்கம் சுரக்காத மனசு
எந்த சாமிக்கு குடியாகும்?

ஓடி ஓடி
அடிக்கிறாயே
எந்த மதமுன்னை மன்னிக்கும்?

புத்த கொடிக்கு
தொப்புள் கொடியறுத்துக் கட்டி
எந்த மண்ணில்
மனிதரென உன்னை மெச்சுக் கொள்வாய்?

விரட்ட விரட்ட
ஓடுகிறார்கள் என்று நினைக்காதே
விரட்டி விரட்டியடிக்கும்
காலத்தையும் இயற்கை வைத்திருகிறது

கை உடைக்கலாம்
கால்களை உடைக்கலாம்
உலக
கண்களை மறைக்க இயலாது?

பெரியவரை அடிப்பதும்
சிறியோரை விரட்டுவதும்
பெண்களைக் கொல்வதும்

மதத்திற்கு என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன் மதத்தால் என்பதே சரி..
———————————————————————

12
ரத்தத்தில்
எங்கிருக்கு வெவ்வேறு நிறம்?

மனிதரில்
எங்கு பிறந்தது
வேறு வேறு நிறம் ?

உள்ளுக்குள்
இணைந்திருந்தும்
வெளியே சதைகளை ஏன்
நீ வேறு
நான் வேறாக அறுத்துக் கொள்கிறாய்..?

யோசித்துப்பார்
நல்லதை செய்தாய், சரி
உனக்குக் கெட்டதையும்
நீதான் செய்கிறாய்..
———————————————————————

13
உனக்கு பிடித்ததை
புரிந்ததை
நீ செய்கையில்

அவனுக்கு பிடித்ததை
புரிந்ததைச் செய்வதில்
அவனெப்படி
எதிரியானான்?

அவரவர் நம்பிக்கையை
அவரவர் சுமந்துப் போங்கள்

அனைவருக்காகவும்
ஒன்றாகவே திளைத்திருக்கிறது
பரந்த வானமெங்கும்
பூமிதோறும்
இறைசக்தி..
———————————————————————

14
இருக்கோ
இல்லையோ
இருக்கவேண்டியவன்
முதலில் மனிதன் இல்லையா ?

அவனில்லாத இடத்தில்
நீ எதை போட்டு நட்டு
என்ன பயன் ?

ஒருவேளை நட்டுத்தான்
பாரேன்
ஒரு பிணத்தின் மீது உனது
மதத்தின் கடவுளை
அதற்கு வாயிருந்தால் – உன் முகத்தில்
காரி உமிழும்..

கடவுள் என்பது
இப்போதைக்கு
அந்த காரி உமிழ்தலின் வெளிப்பாடாக
இருப்பது
நம் இப்போதைய
வாழ்தலின்
அசிங்கமான அடையாளம்.

இல்லையென்றுச் சொல்வோர்
ஒருவர் சென்று
ஒரு உயிரையேனும் பர்மாவிலிருந்தோ
பர்மாப் போன்ற
மதம்பிடித்த மயானத்திலிருந்தோ – காப்பாற்றிவிட்டு
வாருங்கள்,

மதம் நம்பும்
சாமிகளின் ஆசி
உங்களுக்கும் கிடைக்கக் கடவதாக..
———————————————————————

15
பர்மாவில் கொலை
ஸ்ரீலங்காவில் கொலை
காஸ்மீரில் கொலை
பாலஸ்தீனில் கொலை
குஜராத்தில் கொலை
முஸ்லீம் கொலை
இந்து கொலை
கிருஸ்துவர் கொலை
கொலை
கொலை
கொலை; எத்தனை கொலை செய்து
என்றைக்கு நாம் நிரூபிக்கப் போகிறோம்
இதுதானென்று – நாம் முடிவாக நம்பும்
ஒரு கடவுளை..?

நிரூபிக்கும் நாளன்று
நம் கோவில்கள்
நம் மத அடையாளங்கள் இருக்கும்
சாமிகளுக்கு வழிபாடு செய்ய
நாமிருப்போமா?

இருக்கவேண்டுமெனில்
சாமிகளை
மனிதரை மிதித்துக்கொண்டு
தேடாதீர்கள்;

மனிதருக்குள்
இருக்கும் தெய்வீகத்தை உணருங்கள்..

மனிதரைக் காட்டிலும்
அன்புசெய்ய
வேறோர் புனிதமில்லை..
———————————————————————
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..

Ram_singh_mother_2518586b

காய்கறி
வாங்கி வருகையில்
ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா

வெண்டைக்காய் வாங்கி வருகையில்
கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா

தக்காளி நறுக்குகையில்
ஒரு துண்டு கேட்கும் தம்பி

வெங்காயம் நானுரித்தால்
கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட
அண்ணன்

பூண்டுரிக்கும் போதே
நுனி தேய்த்து
கதைகள் பல சொன்னப் பாட்டி

கட்டம்கட்டி ஆடுகையில்
கூதலாட்டம் ஆடிய தோழி

காத்திருந்தேன்
நெஞ்சே வெடித்துவிட்டதென சொன்ன அவன்

கவலை வேண்டாம்
நானிருக்கேன்னு சொன்ன அவர்

இது உன் வீடு
உள்ளே வான்னு அணைத்துக்கொண்ட
மாமியா(ர்)

அம்மான்னா அம்மாதான்’ வளர்ந்ததும்
கொஞ்சியப் பிள்ளைகள்

அவ இல்லைன்னா
நானில்லை ம்மா – முளைவிட்ட
தலைமுறை

நானும்
அம்மான்னே கூப்பிடவா அத்தே’
வலதுகால் பாராமல் உள்நுழைந்த மறுமகள்

அப்பத்தா
அம்மம்மான்னு
உயிர்விடும் அன்புப் பெயரப்பிஞ்சுகள்..

இப்படி
இன்னும்
யார் யாரை நினைத்துக்கொண்டு
சொட்டுகிறதோ தெரியவில்லை

படுக்கையிலிருக்கும்
அம்மாவின் கண்களிலிருந்துச் சொட்டுமந்த
ஒவ்வொருச் சொட்டுக் கண்ணீரும்..
—————————————————–
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

31

னக்குத் தெரியுமா
எனக்கு
இப்போதெல்லாம்
போதை நிறைய ஏறிக் கிடக்கிறது

வெறும்
நீயெனும் போதை..
————————————————————————

2

னக்குத் தூக்கத்தில்
வரும் கனவும்
எனக்கு வரும் கனவும்
ஒன்று தான்;

நீ எனக்குச் சொல்லாததும்
நானுனக்குச் சொல்லாததும் அது..
————————————————————————

3

கைக்குட்டையை கொடுத்து
மடித்து வைத்துக் கொள்
என்றாய்..

எனக்குத் தெரியும்
நீ எதையோ கொடுக்கிறாய்
எதையோ என்னுள் புதைக்கிறாய்

அதை நான்
பத்திரமாக வைத்திருப்பேன்

ஒரு முறை மறுமுறை என்று
சிமிட்டிக் கொள்ளும் இமைகளுள்
நீ கொடுத்த கைக்குட்டையும்
அதோடு மடிந்துக் கிடக்கும் நீயும்

மிக பத்திரமாகயிருக்கும்..
————————————————————————

4

ல்லோரிடமும்
போய் வருகிறேன்
போய் வருகிறேன்
என்றேன்
உன்னிடமும் சொன்னேன்

நீ போ என்கிறாய்
கண்கள் போகாதே என்கிறது,
நானும் போகிறேன் என்கிறேன்
மனசு உன்னோடே நிற்கிறது..

வேறென்ன செய்ய
ஒரு கணத்தில் எப்படியோ
அங்கிருந்து வந்துவிடுகிறேன்
உன்னிடமிருந்து மனசு வந்ததேயில்லை..
————————————————————————
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்