45, யாதுமாகிய அவள்..

funnypictures2840
1
சி
க்னலில் நிற்கும்
அவசரத்திலும்
மனசு தனித்து நிற்கிறது
அவளிடம்..
—————————————————————-2
பூ
வா
தலையா
போட்டுப்பார்கிறேன்
இரண்டிலுமே
அவள் முகம்தான் தெரிகிறது..
—————————————————————-

3
ல்லிகைப்பூ தான்
விற்கிறார்கள் தெருவில்
ஆனால் ஏனோ எனக்கு
அவள் வாசமே வருகிறது..
—————————————————————-

4
மை
யிட்டால் அழகாமே
இட்டாலும்
இடாவிட்டாலும் எனக்கு
அவள்மட்டுமே
அழகு..
—————————————————————-

5
கு
ச்சி ஆட்டம்
ஆடும் குழந்தைகளைப் போலவே
மனதிற்குள்
அவள்தான் ஆடுகிறாள்..
—————————————————————-

6
ணி பொழிகிறது
மழை சோவெனப் பெய்கிறது
நானென்னமோ
அவள் நினைவில் மட்டுமே
நனைகிறேன்..
—————————————————————-

7
கா
ற்றும் காற்றும்
மோதாமல்
கலந்துக்கொள்வதைப் போலவே
கலந்துவிடுகிறது
மனசு அவளிடம்..
—————————————————————-

8
ட்லி சாப்பிட்டாலும்
உப்புமா சாப்பிட்டாலும்
மனசு
அவளைத்தான்
அசை போடுகிறது..
—————————————————————-

9

பாட்டு கேட்கையில்
ஊரை நினைத்துக் கொள்வதைப்
போலத்தான்
அவளையும் நினைத்துக்கொள்கிறேன்
கொஞ்சநேரத்தில் ஊர் மறந்துவிடுகிறது
அவளை மறக்கவே முடிவதில்லை..
—————————————————————-

10
வா
ட்சப் திறக்கிறேன்
உள்ளே அவள்
வைபரைப் பார்க்கிறேன்
உள்ளே அவள்
பேஸ்புக் திறக்கிறேன்
அங்கும் அவளே இருக்கிறாள்கைப்பேசியையே நிறுத்திவிடுகிறேன்
கண்ணுக்குள்  வந்துநிற்கிறாள்

கண்களை மூடிக்கொள்கிறேன்

கனவுக்குள் வருகிறாள்

என்னசெய்வது அவளை ?

வேறென்னச்செய்வது
வெறுமனே நினைத்துக்கொள்கிறேன்
உள்ளே அப்படி இனிக்கிறாள்.. அவள்!!
——————————————————————–
வித்யாசாகர்
Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..

forest-mountains-trees-landscape-summer-sun

1
தெ
ருவோரம் ஒதுங்கிநின்றேன்
மழையில்லை
செருப்பறுந்தக் காலில்
சுட்டது வெயில்;

செருப்பின்றி எதிரே
மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி
சுட்டது மனம்!
——————————————————————–

2
தா
கத்திற்கு
பெப்சி வாங்கப்போனேன்
பசிக்கு
பிச்சைக் கேட்டு
நிற்கிறது ஒரு குழந்தை!!
——————————————————————–

3
பு
கைப்பிடிக்க இறங்கி
ஒரு கடையோரம் நின்றேன்

நிழலுக்கு ஒதுங்க
ஒரு நாய்க்குட்டி வந்து
என் காருக்கடியில் படுத்துக்கொண்டது..
——————————————————————–

4
தியநேரம்
உச்சிவெயிலிலைக் கடிந்தபடி
உணவகத்துள் நுழைந்தேன்

வியர்வையுள் நனைந்தபடி
நெருப்பருகில் நின்று சமைத்துக்கொண்டிருந்தார்
அதே உச்சிவெயிலில்
ஒரு பெரியவர்!!
——————————————————————–

5
வீ
டுகளுக்கு
குளிரூட்டிக் கொண்டார்கள்
மனிதர்கள்..

மரங்களுக்கும்
பறவைகளுக்கும்
வெப்பத்தைக் கூட்டிக்கொண்டு..
——————————————————————–

6
கரங்களில்
வெப்பம் பிரச்சனையில்லை
மின்சாரம்தான் பிரச்சனை

கிராமங்களில்
வெப்பமும் பிரச்சனை
மின்சாரமும் பிரச்சனை..
——————————————————————–

7
வெ
யில் பற்றி எழுதுவோருக்கு
நினைவிலேயே
இருப்பதில்லை
பெண்கள் நிற்கும் அடுப்படியும்
துணி காயவைக்கும் மொட்டைமாடியும்..
——————————————————————–

8
வா
சலில்
வெய்யிலில் அமர்ந்திருக்கும்
பாட்டியைத் தாண்டிப்போய்
சந்தைக்குள்ளிருக்கும் கடையில்
வாழையிலையோ
பூவோ
காய்கறியோ வாங்கிப்போகும்
நமக்கெல்லாம்
பாட்டி பிழைத்தாலென்ன
பிழைக்காவிட்டால் தானென்ன..
——————————————————————–

9
ரை பெடல் அடித்து
மிதிவண்டி ஓட்டும்
சிறுவனுக்கு
வெயிலில் கடைக்கனுப்பிய
இரக்கமற்ற
பக்கத்துவீட்டு அத்தைக் கூட
சாமி தான்..
——————————————————————–

10
நா
க்கு தொங்கத் தொங்க
வெயிலில்
மூச்சிரைக்க ஓடி
மரத்தடியில் நின்றது நாய்,
நாம் மரத்தை வெட்டினோம்

ஓடிப்போய்
சேற்றில் படுத்துக்கொண்டது நாய்
இழுத்து
கதவுகளை மூடினோம்

பசியில்
தாகத்தில்
வெயிலில்
சுற்றிச் சுற்றி வந்தது நாய்

அதைப்பற்றி
நமக்கென்ன கவலை, நாம்
சாப்பிட்டுவிட்டு
தூங்கச் சென்றுவிட்டோம்

மீண்டும்
வாசலில் வந்துநின்று
கத்தியது நாய்

ஒரு கல்லெறிந்து
வாசலில் விட்டதும்
ஓடியது ஓடியது மீண்டும்
வெட்டாத ஒரு மரம் தேடி

தேடி

ஓடிக்கொண்டே இருந்தது
அந்த நாய் ..
——————————————————————–
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31, இது நிறம்மாறும் பூ..

1
வீ
டு பெருக்குகையில்
விளையாட்டுப் பொருட்களை யெல்லாம்
புலம்பிக்கொண்டே எடுத்து
அடுக்கினாள் அம்மா

விளையாட்டுப் பொருட்களை யெல்லாம்
புலம்பிக் கொண்டே
கலைத்துப்போட்டது குழந்தை..
——————————————————————–

2
வி
ளையாட்டுப்
பொருட்களைப்போலவே
மனதிற்குள் அடுக்கிவைத்துக் கொள்கிறார்கள்
குழந்தைகள் நம்மை

இது அப்பா
இது அம்மாவென்று!
——————————————————————–

3
ள்ளிக்கூடம் முடிந்து
மணி அடித்ததும்
ய்யே…. என்றுக் கத்தினார்கள்
வீட்டிற்குப் போகும் குழந்தைகள்,

மறுநாள் வீட்டிலிருந்து
பள்ளிக்கூடம் வருகையில்
சோகமாய் நடந்து வந்தனர் பிள்ளைகள்,

ய்யே…. யெனக் கத்தியது பள்ளிக்கூடம்..
——————————————————————–

4
வர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
அவன் தான் செல்லப்பிள்ளை
இவன்தான் செல்லப்பிள்ளை என்று,

அவர்களுக்கெப்படித் தெரியும்
இரண்டுப்பேருமே
பெற்றவர்களுக்கு
உயிரைவிட பெரியப் பிள்ளைகளென்று..
——————————————————————–

5
ந்தையும் மகனுமானாலென்ன
தந்தையும் மகளுமானாலென்ன
வயிறும் வாயும்
வேறு வேறுதானே என்கிறார்கள்

ஆம்; அதெல்லாம் வேறு வேறு தான்
ஆனாலெங்களுக்கு
உயிர் மட்டும் ஒன்றேயொன்று, அது
அவர்களுக்கான ஒன்று!
——————————————————————–

6
டிச்சியா
படிச்சியான்னு அடிக்கிறது
அந்தகாலம்,

படிக்கலைன்னா விடு
பார்த்துக்கலாம், அது
இந்தக் காலம்

எந்த காலமானலென்ன,

தந்தையர் எப்போதும்
அந்தந்த மகனிற்கான
அப்போதைய தந்தையாகவே இருக்கிறார்கள்..
——————————————————————–

7
னக்குத் தெரியுமா
நீ புத்தகப்பை யை
சுமந்துச் செல்கையில்
உன் பின்னால் நின்று உனைப் பார்க்கும்
அம்மாவிற்கும்
அப்பாவிற்கும்
அந்தப் பையின்
கனம்கூட நெஞ்சில் கனக்குமென்று ?!!
——————————————————————–

8
தூ
ங்கும்போது நான்
எனது –
குழந்தைகளின் முகத்தையேப் பார்க்கிறேன்

எனைப்போலவேதானே வாழ்க்கை
இவர்களுக்கும்
வலிக்குமென்று துடிக்கிறேன்..

கொஞ்சம் சிரிப்பாகவும்
கொஞ்சம் பயமாகவும் தெரியுமவர்களின்
முகத்தோடு
கத்தி நீட்டாமல் மிரட்டுமந்த
எதிர்காலத்தை
சற்று சபிக்கிறேன்..

கசக்கி பிசைந்து உருட்டி
நல்லதாக மாற்றியக் கனவுகளாக
மனக்கண்ணுள் வீசி
அவர்கள்மீது எரிகிறேன்..

போ; போய்
வெற்றியின் கனவுகளாக
அங்கே விரி..

கட்டளையின் நிம்மதியில்
உறங்கச் சம்மதிக்கிறது என் மனசும்..
——————————————————————–

9
ன் பிள்ளை சிரிச்சா ஓரழகு
பேசினா ஓரழகு
நடந்தா ஓரழகு
ரெட்டை பின்னல் போட்டாலழகு
ஒற்றை வகிடு எடுத்தாலழகு

புட்டு என்றாலவனுக்கு
பாலினிக்கப் பிடிக்கும்,
உப்புமான்னா உயிரு

ஓவியமா; தங்கமா வரைவான்
பாட்டா; அருமையா பாடுவான்
மதிப்பெண்?
அதலாம் அவன்தான்
முதலிடம் வருவான்

இப்படி
எத்தனை எத்தனை
ஆசைவார்த்தையுள் வளரும்
இதே அறிவு –

வளர்ந்தப்பின் நாளை தனிவீடு தேடுமென்று
எந்தத் தாய்க்கும் தந்தைக்கும்
நம்ப கூட துணிவிருப்பதில்லை..
——————————————————————–

10
ப்பா இன்னைக்கு எங்க மேம்
என் கைல ஸ்டார் போட்டிருக்காங்க,

அப்பா நான் இன்னைக்கு
முதல் பரிசு வாங்கி இருக்கேன்,

அப்பா நான் மாநிலத்துலையே
முதல் மதிப்பெண் எடுத்துட்டேன்,

அப்பா எனக்கு பெரிய நிறுவனத்துல
வேலை கிடைச்சிடுச்சி.,

இப்படி சொல்லிச் சொல்லி
பூரிக்கவைத்த
அதே மகன்தான் –

இன்று
வயதாகி அமர்ந்திருக்குமிந்த
வாசலோரக் கிழவனை தாண்டிப் போய்
மனைவியிடம் சொல்கிறான்

உள்ளே வா சொல்றேன்..
——————————————————————–
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

21, மரணத்தை விழுங்கும் ரகசியம்..

asasa


 

 

 

 

 

 

1

சிரிப்பழிவதைக் காட்டிலும்
ஒரு கொடூர வலியில்லை..,

கூடஇருந்து சிரிப்பவர்
நடப்பவர்
உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்
இறப்பதைக்காட்டிலும்
தன் மரணமொன்றும்
தனக்குப் பெரிதாக
வலித்துவிடப் போவதில்லை..,

போனவரை
போனவராக
விட்டுவிட இயலாததொரு
நினைவு எரிக்கும்
நடைபிண வாழ்க்கையே நம் வாழ்க்கை..,

குலுக்கி குலுக்கி
உண்டியல் ஆட்டிக் காண்பிக்கும்
சிறுபிள்ளையினைப்போல
இயற்கை நமை குலுக்கி குலுக்கி யாரையோ
ஒருவரை நம்மிடமிருந்து – நம்
வலியறியாமலே கொண்டுபோய்விடுகிறது.,

இப்படி
ஒவ்வொருவரையாய்
உடனிருப்போரை
இழந்து இழந்து
மெல்ல
மெல்ல
எரிந்து எரிந்து
தீரும் மெழுகாக நின்றுக் கரைவதைக் காட்டிலும்
ஒரு காற்றாடித்தாற்போல்
சட்டென நின்றுவிடலாம்; அது மேல்!!
———————————————————————————

2
சா
வு
மாலை
ஊதுவத்தி
விளக்கு
உடஞ்ச தேங்கா
மேளம்
கதறல்
கூத்து
எரிக்கிறது
புதைக்கிறது
என்னத்தைதான் செய்து தொலைத்தாலும்

கண்முன் நிற்கிறதே அந்த முகம் (?)
அந்த முகத்தின் நினைவு (?)
அதை எது கொண்டு எரிப்பது ?

இப்படிக் கண்ணீர்க்கொண்டு அழிப்பதைக் காட்டிலும்
செந்நெருப்பு மூட்டி போ;

மூளட்டும் பச்சை தேகமெங்கும் தீ
விட்டுப்போகட்டுமந்த பிரிவில் வலிக்கும் உயிர்!!
———————————————————————————

3
நெ
ருப்பு உள்ளிருக்கும்
தீக்குச்சிகளைப்போலவே மனதுள்
உரசிக்கொள்கிறது நினைவுகள்..

சமயம் பார்த்து
தானே எரியும் தீக்குச்சிகளையோ
யாரோ கொளுத்திவிடும் யதார்த்தத்தின்
அனல் பட்டு வலிக்கும்
ஏக்கத்தின் வடுக்களையோ கூட
தொட்டுப் பார்த்து தொட்டுப்பார்த்து
அழத்தான் செய்கிறது மனசும்..

உண்மையில் மனதழும் கண்ணீருக்கெல்லாம்
வேரே இருப்பதில்லை,
யாரோ தூவிய விதையின் கிளையாக
ஆயிரமாயிரம் மரங்கள்
அதுவாக உள்ளே முளைத்துக்கொண்டு
அதுவாக ஆடுகிறது
அதுவாக வலிக்கிறது,

காற்றில் படாமல் வழியும்
கண்ணீருக்கு ரத்தம் சமமென்று
சாகும்வரை தெரியாமல்
வாழ்வை மிதித்து மிதித்து தள்ளியவாறு
மயானக் காடுதேடி அலைவதே
மனிதருக்கிடப்பட்ட சாபம் போல்..

யாரோ அடிக்கிறார்கள்
யாரோ அணைக்கிறார்கள்
எங்கோ நிற்கிறோம்
எப்படியோ மறைகிறோம்
சட்டென அணைகிறது விளக்கு
சாம்பலாகிப் போகிறது உடல்,

சுயம் அழிந்துப்போகிறது
ஒன்றுமில்லா –
அந்த இடத்திலும் நினைவுகள் மரங்களாகின்றன
மரங்கள் காடாகிறது,

காடெங்கும் தீக்குச்சி
தீக்குச்சி எங்கும் நெருப்பு
உள்ளே வலிக்கும் நெருப்பு
நினைவு தகிக்கும் நெருப்பு,

எல்லோரையும் எல்லாமுமாக இருந்து
கண்ணீரால் சுடும் நெருப்பின் ரணம்
ரணம்
ரணமெங்கும் பரவி நின்றுக்கொண்டு
செத்தும் சுடுமிந்த மரணம்..

மரணம்..
மரணம்..

என்னதான்
செய்வதிந்த மரணத்தை?

இதோ நானெடுத்து விழுங்கிவிடுகிறேன் – இனி
எனது கண்முன் யாரின் மரணமும் நிகழாது..
———————————————————
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..

unnamed
ழையோடும் வெயிலோடும்
போராடக் கற்றுத்தந்த கூரையது;
உழைத்து உழைத்து வந்தபணத்தில்
பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது,

வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்தநாட்களை
பழையக்கஞ்சோடு பருகிய காலமது;
மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம்
கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது,

கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா
மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது;
இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும்
கோபுரங்களுள் விட்டுச்சென்ற சிற்பிகளின் சாலையது..

ஏருழுது மரம்வெட்டி வீடுவைத்த வியர்வையில்கூட
பாட்டுகளை நனைத்துக் கட்டிய ஒய்யாரப் பொழுது அது;
விடிவெள்ளி நிலவுகாட்டி மடியிலுறங்கும் குழந்தைக்கு
தாய் நம்பிக்கையையும் சேர்த்தூட்டிய வளர்ப்பு அது,

மரணமென்றால் கூடியழ தளர்ந்துவிழுந்தால்
தாங்கிப்பிடிக்க உறவுகள் சேர்ந்திருந்த மாளிகையது;
மழைவந்தால் வீடொழுக, வீடொழுவ தாயழுக
தாயோடுப் பிள்ளைகளும் சொந்தமும் கூடியழுதவேளையது,

சோறாக்கி சொக்குபொடி சேர்த்துருட்டி செல்வியவ கொடுத்ததுல
அச்சோ அச்சச்சோ’வென மனஞ் செவந்த நாட்களது;
சொத்தெல்லாம் சொந்தமாக, சொத்தெல்லாம் வீடாக
சொத்தெல்லாம் அன்பென்றேவாழ்ந்த ஈரமனக்கூடு அது;

சிம்னி விளக்குதுடைத்து சன்ன ஒளியேற்றி
மின்னும் பொன்னெழுத்தாய், மரபுசொல்லும்
ஆத்திச்சூடியையும் கண்ணன் வாய்ப்பாடையும்
மாறி மாறி மனனம் செய்தப் பருவமது,

சாணி மெழுகி செம்மண் பூசி, கட்டாந்தரையும்
பூசியச் சுவரும் மழையிலூறிப் போனாலும்’
மனதில் தீரம்தீரா மனிதர்களின்
பிழைப்பு நடந்தச் சாட்சியது,

இனி காலம் மாறி, கட்டிடம் ஏறி
வாழ்வு எதுவாக ஆனாலும்; நினைவில் நீங்கா அதுவாகவே
அமர்ந்திருக்கும் அழியாக் கூடு அது; நம்
அறிவொழுகிய வீடு அது!!
———————————————————————————-
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்