பிரிவுக்குப் பின் – 17

இன்று எனக்குப்
பிறந்தநாள்

புது துணியுடுத்தி
எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து
தொலைபேசியில் எல்லோரிடமும்
வாழ்த்துப் பெற்றுக் கொண்டு
வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில்

கண்களின் ஓரம் –
ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது;

தூக்கம் கலைவதற்குள் நீ வந்து
என் காதுகளில் கிசுகிசுக்காத
பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!
———————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக