வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,658
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: பிப்ரவரி 6, 2010
பிரிவுக்குப் பின் – 20
இன்று நம் குழந்தைக்கு பிறந்த நாள்; ஏதேனும் நல்ல பரிசாக வாங்கிக் கோடு – தயவு செய்து இன்றொரு நாலாவது ‘அப்பா இன்று வந்துவிடுவேனென்று’ சொல்லி ஏமாற்றாதே! ——————————————————-
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 19
உனக்கும் எனக்குமிடையே நான்காயிரம் மயில்கள் தூரத்தில் நகர்கிறது வாழ்க்கை; நம் அக்கம்பக்கத்தார்களுக்குத் தான் நான் ஃபாரினிலிருந்து – செண்டு வாங்கிவரவில்லை யெனக் கவலை! ————————————————————
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 18
கவலை படாதே.. இந்த முறை நான் ஊருக்கு வந்தால் அங்கேயே தங்கி விடுகிறேன்; ஏன் சிரிப்பு??? இப்படி சொல்லி சொல்லித் தான் பத்து வருடங்களை – இங்கேயே கழித்து விட்டேனோ; பரவாயில்லை – வருத்தப் படாதே நாம் தொலைத்த ஆசைகளின் வருமானத்தில் – நம் பிள்ளைகளின் வாழ்கையையாவது நம்மூரிலேயே வாங்கித் தருவோம்! ———————————————————–
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 17
இன்று எனக்குப் பிறந்தநாள் புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா! ———————————————————
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 16
தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை! ——————————————————–
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக