பிரிவுக்குப் பின் – 22

ன்று சம்பளம்!
வாங்கிய உடனே உனக்கனுப்பினேன்
அம்மாவிற்கு அனுப்பினேன்
அக்கா வீட்டிற்கும் –
தங்கச்சி சீதன பணமும் அனுப்பினேன்
அண்ணன் குழந்தைகளுக்கு ஏதேதோ
கேட்டிருந்தார் வாங்கியனுப்பினேன்
எல்லாம் முடித்துவிட்டு வந்து
படுக்கையில் வீழ்கையில் –
அப்பாடா என்றொரு நிம்மதி;

அவைகளை எல்லாம் தாண்டி –

தனிமை இரவின் தவிப்பில் –
தலையணை நனைத்த ஒரு சொட்டுக் கண்ணீரில்
உனை விட்டுப் –
பிரிந்திருப்பதும் தெரியாமலில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக