ஒன்று செய்
நீயும் என்னை
நினைத்துக் கொண்டேயிரு
நானும் உன்னை
நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்;
குறுக்கே யாரேனும் வந்தால்
கல் வாரி வீசு;
பயித்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்.
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்???
வெறும் சாதிக்கும்
மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த
மனிதர்கள் திரியுமிடம் –
வாழுமிடமல்ல;
அன்பை –
நரபலியிட்டுவிட்டு
அரைக் காசு கவுரவம் வேண்டி
மகள்களையும் மகன்களையும் கொன்ற
ஜடங்கள் வாழும் –
மண் இது, பூமியல்ல
நம் மனசிங்கே கல்; கிறுக்கு;
கேட்டால் கீழ்தனமென்பார்கள்.
சொல்லட்டும் சொல்லட்டும்
காலம் அதோ –
காதலர்களின் பின்னே நகர்கிறது
நாளை ஜாதியை –
நாய் நரி மதிக்காது;
மனிதன் ஓர் நாள்
மனிதனாய் மதிக்கப் படுவான்,
அன்று நீயும் நானும்
காதலர்களாய் –
பேசப் படுவோம்!

























Very Nice
LikeLike
மிக்க நன்றியென் சகோதரியே!
LikeLike