6. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நான் –
வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;

நீ –
வீட்டிற்குள் நின்று
எனக்காகக் –
காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;

தெரிந்தும் –
நான் காத்திருக்கட்டுமேயென
நீ –
வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;

வெளியே –
ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக