நான் –
வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;
நீ –
வீட்டிற்குள் நின்று
எனக்காகக் –
காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;
தெரிந்தும் –
நான் காத்திருக்கட்டுமேயென
நீ –
வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;
வெளியே –
ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!
























