33. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ழை –
விட்டு விட்டு வீசுகிறது

நீயும் –
வந்து வந்து போகிறாய்

மழை மெல்ல
நனைக்கிறது

நீயும்
நனைத்தாய்

மழை
உடலெல்லாம் பரவுகிறது

நீயும்
பரவினாய்

மழை
உடம்பிற்குள் ஊறி
உயிர்வரை தொட்டது

நீயும்
தொட்டாய்

மழை
நின்றது
விட்டுவிட்டேன்;

நீயும் நின்றாய்
நானற்றுப் போனேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக