மழை –
விட்டு விட்டு வீசுகிறது
நீயும் –
வந்து வந்து போகிறாய்
மழை மெல்ல
நனைக்கிறது
நீயும்
நனைத்தாய்
மழை
உடலெல்லாம் பரவுகிறது
நீயும்
பரவினாய்
மழை
உடம்பிற்குள் ஊறி
உயிர்வரை தொட்டது
நீயும்
தொட்டாய்
மழை
நின்றது
விட்டுவிட்டேன்;
நீயும் நின்றாய்
நானற்றுப் போனேன்!
























