Monthly Archives: பிப்ரவரி 2010

33. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

மழை – விட்டு விட்டு வீசுகிறது நீயும் – வந்து வந்து போகிறாய் மழை மெல்ல நனைக்கிறது நீயும் நனைத்தாய் மழை உடலெல்லாம் பரவுகிறது நீயும் பரவினாய் மழை உடம்பிற்குள் ஊறி உயிர்வரை தொட்டது நீயும் தொட்டாய் மழை நின்றது விட்டுவிட்டேன்; நீயும் நின்றாய் நானற்றுப் போனேன்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு! (உழைப்பின் உயர்வு)

வீட்டில் சோறில்லையெனில் தெருவில் சோறு. தெருவில் சோறு முடிந்ததும் வீட்டில் தூக்கம், அக்கம் பக்கத்துல பிட்டு போட்டா சிகரெட்டு, நல்லா தெரிஞ்சவனை நாலு நாள் தாண்டிப் பார்த்தால் கட்டிங்கு; உசார் பண்ணி பணம் பிடுங்கினா பேண்ட்சர்ட்டு; ச்சீ பொழப்பா இது? இதுக்கு நாண்டுக்குனு சாகலாமில்லையா??? ஆனால் சாகாத ஆசாமிகள் நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறார்கள். … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 8 பின்னூட்டங்கள்

ச. சக்திவேலின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

அன்புடையீர் வணக்கம், தமிழுலகம் சில காலம் தவறவிட்ட ஒரு படைப்பாளி ச.சக்திவேல். வாழ்வின் ரசனைமிக்க ஒரு நல்ல மனிதரின் சமூக பார்வை கவிதையாகியும் காலம் கடந்து கிடைத்ததன் வருத்தம் எழத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட படைப்போடுத் தான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் இந்த ச.சக்திவேல். எனக்குத் தெரிந்தே பல மேடைகளை அலங்கரித்து, எண்ணற்ற கவிதைகளை … Continue reading

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக

32. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் தலையிலிருந்து விழுந்த மலரை எடுத்து காயாமல் பார்த்துக் கொண்டு வந்தேன்; பின்னொரு நாளில் காய்ந்துத் தான் போனதந்த மலர், மலரை எடுத்து வைத்ததும் உன்னை காதலித்ததும் முட்டாள் தனம்!.

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

31. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னருகில் வந்து என்னை கடந்து செல்கையில் உன் வாசமும் என் வாசமும் காற்றில் கலந்துத் தான் போனது!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்