உனை நான்
தூர நின்று பார்ப்பேன்
கற்பனையில் நெருங்குவேன்
கண்ணியத்தில் தொடுவேன்
காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன்
உனை பார்க்கும் போது கூட
உன்னிடம் –
பார்ப்பதை காட்ட அச்சப் படுவேன்;
பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும்
காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்;
அதலாம் மீறி
எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது
நானுன்னை நேசிப்பது.
நீ என்னிடம் மிக நன்றாக பேசுகிறாய்,
சிரிக்கிறாய்,
என்னை தொடுகிறாய்,
என்னோடு மட்டுமே அதிக நேரமிருக்கிறாய்,
தூர நிற்கையில் குரலெழுப்பி அழைக்கிறாய்
அருகே; மிக அருகே ஒட்டி நிற்க
முயல்கிறாய்,
இதில் எதை காதலென்று சொல்லி
உனை காதலிப்பதாய் சொல்வேனோ?
வேண்டுமெனில் ஒன்று செய் –
இம்மடலை படி
படிக்கமட்டும் செய்
நாளை சந்திக்கையில் படித்துவிட்டேனெனத்
திருப்பிக் கொடு.
பிறகு பார்
நீ என்னை பார்க்கும் பார்வையில் –
நானுன்னை நெருங்கும் மௌனத்தில்
உன் கண்ணும் என் கண்ணும்
நம் காதலை நிறையவே பேசும்!!
———————————————————————-
























