(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

வேறோர் வீட்டின்
வாசல் கடக்கையில் கூட
நீ அங்கே நிற்கிறாய்..
 
திரும்பி வரும் வரை கூட
காத்திருக்கிறாய் –
 
மனசு கனத்து
பார்வையில் –
மறைக்க மனமின்றி
 
கேட்டால் மட்டும்
பொய் சொல்லி போகிறாய்
காதலிக்க வில்லையென;
 
அதனாலென்ன
நான் நாளையில் இருந்து
உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை.
 
மனது கனத்தால்
உடனே வந்து
காதலிப்பதாக கூட
சொல்ல வேண்டாம்;
 
சற்று என் வாசல் கடந்து போ.
 
உன் காலடி சப்தத்தில்
என்.. சிரிப்பு மலர்கள்
காதலாய் காதலாய் பூத்துவிடும்!!
———————————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக