12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..

என் இனியவளே
வார்த்தைகளில் மெல்ல மெல்ல
இதயம் தொட்டவளே,

உள்ளிருக்கும் காதலுணர்வை
பார்வையால் ஈர்தவளே,

காலத்தின் வழி தடத்தில் –
எனக்குமாய் உதித்தவளே,

உன் வாழ்நாளில் ரசனைகளில்
என்னையும் சேர்த்தவளே..

வா.. உன்னில் பதிந்த
ஒரு நினைவெடுத்து
கவிதைகளாய் பூப்பிப்போம்;

உன் மௌனத்தின்
புன்னகை உடைத்து –
காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக