என் இனியவளே
வார்த்தைகளில் மெல்ல மெல்ல
இதயம் தொட்டவளே,
உள்ளிருக்கும் காதலுணர்வை
பார்வையால் ஈர்தவளே,
காலத்தின் வழி தடத்தில் –
எனக்குமாய் உதித்தவளே,
உன் வாழ்நாளில் ரசனைகளில்
என்னையும் சேர்த்தவளே..
வா.. உன்னில் பதிந்த
ஒரு நினைவெடுத்து
கவிதைகளாய் பூப்பிப்போம்;
உன் மௌனத்தின்
புன்னகை உடைத்து –
காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..!
























