இப்போதெல்லாம்
நான் அதிகம் உன் நினைவோடு
இருக்கிறேன்;
உன்னை பற்றியே
எண்ணுகிறேன்;
உனை பார்ப்பதில்
உன் அருகாமை கொள்வதில்
முனைப்பாகிறேன்;
காலத்திற்கும் நீ
கிடைப்பாயா என்றே
ஏங்குகிறேன்;
கிடைக்காவிட்டால்
என் நிலை என்ன என்றே உணராமல்
எப்படி நிகழ்கிறதோ;
இத்தனையும் உன்மேல்???!!
———————————————-
























