காலங்களை கடந்தும்
நிறைய மனசுகள்
மாறாமலிருப்பதில்லை.
மாறிப் போகும் போது
மாறட்டும் என் மனசும்.
அதுவரை உனையே
நினைத்திருக்க –
உன் பார்வையை மட்டும் எனக்கு
கடன் கொடு.
உயிர்பிரியும் விளிம்பில்
உனை மறக்கும் மனசு ஒருவேளை
கிடைக்கலாம்,
அந்த கிடைப்பில்
உன் பார்வைகளாவது
மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!!
———————————————————–
























