நீயும் நானும்
தெருவில் நடந்து செல்கிறோம்.
நீ விலகி விலகி
நெருங்கி வருகிறாய்..
நான் உனை நெருங்கி நெருங்கி
விலகிப் போகிறேன்..
எப்படியோ மாறி மாறி
நெருக்கம் கொண்டு விடும் நம்
ஸ்பரிசத்தில் –
தெருவோரப் பூக்களாய்
மலர்கிறது நம் காதலும்!
—————————————–
























