அரைகுடத்தின் நீரலைகள் – 7

வாழ்க்கையை
உலகை
வெற்றிகளை யெல்லாம்
சுண்டி ஒரு விரல் நுனியில்
வைக்க

மனசு போதும் என்று
தெரிந்தோ தெரியாமலோ
உணர்ந்தவர் தான்
முன்னே நிற்கிறார்;

புரியாதவர்கள்
வாயை மூடிக் கொண்டு
மனதை திறப்போம்;

நாளையாவது –
பின்னிருந்து முன் செல்லலாம்!
——————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக