Monthly Archives: ஓகஸ்ட் 2010

அரைகுடத்தின் நீரலைகள் – 9

தளும்பும் நீராகவே அலைகிறது மனசு உள்ளே வலியோ கவலையோ சிரிப்போ மரணமெனும் ஒன்றோ தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறது! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 8

உண்ணக் கொடுப்பதில் பிறர் தின்னக் கிடைத்தலும் தொந்தி ஒழித்தலும் புலன்கள் புரிதலும் வாழ்க்கை நெறி படுதலும் உண்டென்பது பட்டினியில் உள்ளவர்க்கும் ஈயாத புத்திக்கும் – ஒருகாலும் விளங்குவதில்லை! —————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 7

வாழ்க்கையை உலகை வெற்றிகளை யெல்லாம் சுண்டி ஒரு விரல் நுனியில் வைக்க மனசு போதும் என்று தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தவர் தான் முன்னே நிற்கிறார்; புரியாதவர்கள் வாயை மூடிக் கொண்டு மனதை திறப்போம்; நாளையாவது – பின்னிருந்து முன் செல்லலாம்! ——————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 6

எத்தனை சாமி வந்தும் தன்னை நான் தான் சாமி என்று அடையாளப் படுத்திக் கொள்ள இயலாமையிலும் எப்படியோ நம்புகிறது மனசு சாமியை! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!

விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்! உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்! அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்