Daily Archives: நவம்பர் 14, 2010

41 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

வாழ்வின் சுவர்களில் கொட்டை எழுத்தில் எழுதப் படுகிறது மரணம்; படிக்க மட்டுமே நாளாகிறது! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

எத்தனையோ பேரின் மரணத்தில் நிகழ்வதில்லை பாடம்; என் வீட்டின் ஒரு சின்ன மரணம் மாற்றி விடுகிறது என் பாதையையும் வாழ்க்கையையும், வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில் பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில் நிகழ்கிறது – தனக்கான மரணம்! ———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

39 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

யாரும் பயந்துவிடாதீர்கள் பயம் கொள்வதால் விட்டாசெல்கிறது மரணம்? விட்டு செல்லுங்கள் மரணத்தை துணிவிருந்தால் வந்து நம்மை பெற்றுக் கொள்ளட்டும் மரணம்; பெறாத மரணத்தில் எனக்கென்னவோ வாழ்வதாகவே தெரியவில்லை – நிறைய பேரின் வாழ்க்கை! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

38 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

எ ன்ன தான் மனிதன் செய்தாலும் – மனிதனை செத்து தொலை என்று சொல்ல விடுவதேயில்லை மரணம்; மீறி சிலர் சொல்கிறார்கள் ஏன்; கொலை கூட செய்கிறார்கள் மனிதரற்றோர்; மரணம் அவர்களை மன்னிப்பதேயில்லை, மாறாக தினம் தினம் கொள்கிறது, கடைசி ஓர்நாளில் அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

37 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

பெரிய மிராசுதார் பிச்சைக்காரன் ஆண் பென் சாமி குடிகாரன் திருடன் நல்லவன் கெட்டவன் யாரையுமே பார்ப்பதில்லை மரணம்; ஆனால் – நெருங்கும் முன் நன்றாக; பார்த்துக் கொள்கிறது! ————————————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்