Monthly Archives: நவம்பர் 2010

குவைத்தில் செந்தமிழ் கலைவிழா!!

அன்புடையீர் வணக்கம், ஒரு கால தவம்; நிகழ்வின் வெற்றிகளில் பூரிக்கிறது. அப்படி வெற்றி கொப்பளிக்கும் ஒரு தினத்தை நோக்கி விழா எடுக்கிறது ‘குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், ஐயா திரு. செம்பொன் மாரி. கா சேதுவின் தலைமையில். கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் ‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் கவியரங்கமும், கிராமிய பாடகி திருமதி. … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 அரைகுடத்தின் நீரலைகள்..

தங்கத்தின் மினுக்களில் வியர்வையின் வாசத்தில் வேறுபாடும் மனிதர்களை ஒன்று சேர்க்கிறது கவிதை; அதையும் பிரித்தே பார்க்கிறான் மனிதன்!! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 அரைகுடத்தின் நீரலைகள்..

பெருச்ச்ச்ச்சா வாய்கிழிய ஏதாவது பேசுவோம்; முகத்திரை கிழிபடாத நம் தவறுகளின் சுவட்டின் மீது நின்று!! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 அரைகுடத்தின் நீரலைகள்..

நானும் என் தம்பியும் தெருவில் நடக்கிறோம் அவன் எதிரே வரும் போகும் பெண்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வருகிறான் ஐயோ இப்படிப் பார்கிறானே என்று உள்ளே சற்று வலிக்கையில் – என் சபலமும்; எனை காரி உமிழ்ந்தது! ————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தவறுகளுக்கு தண்டனையாக தோல்வி வேண்டாம்; வேண்டுமெனில் – மரணம் கிடைக்கட்டும்! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக