39 தமிழால் தானுயர்வோம்..

டதடவென உயிர் துடித்தொரு
வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு
பதைபதைத்தொரு – மானம் காக்க
புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா;

நாடு காக்க முடிவெடு முதல்
மக்கள் காக்க துணிந்தெழு முதல்
மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க
திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க – தமிழா;

வீரமறவன் குடித்த பாலின்
வெற்றிக் கொண்ட பண்டைத் தோளின்
மானங் காக்க கிளர்தெழுமொரு புரட்சி
உன் தடை உடைத்தெழு – தமிழா;

நதியின் நீளம் கடலின் ஆழம்
உலகம் போற்றும் வாழ்வின் சாரம்
வாழ்க்கை நியதி பாதைச் சொல்ல
வாழ்ந்தவன் நீ – தமிழா;

நீ வீறு கொள்ளு தமிழா – தரணி
பேரு சொல்லும் தமிழா,
பறைமுழங்க  பூமியதிர – உன் நடையின் வீச்சில்
சிங்கமொழிய, புலிக்கொடி யது வானில் பறக்க; புறப்படு தமிழா!

மண்ணும் பெண்ணும் பெரிது பெரிது
மொழியும் வளமும் பெரிது பெரிது
அடிமை யொழித்து நிமிர்ந்து நடக்க
பேத விலங்கு உடைத்து தகர்த்து ஒன்று ஒன்று ஒன்றுயென்று

ஒன்றுகூடிப் புறப்படு தமிழா; தமிழால்
தானுயர் தமிழா!!

—————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., பாடல்கள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s