60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..

ரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,
கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்
அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்
முடமாய்க் கிடக்கிறேன்;

வாசலில் பூசணி உடைக்கிறேன்
உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,
காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்
இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;

யாருக்கு யாரென்றுத் தெரியாமலே
காதலில் உலகை மறக்கிறேன்;
பின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு
குவாட்டரேனும் வாங்கிக் குடிக்கிறேன்;

யாருக்கு என்னானால் எனக்கென்ன
எதிர்வீட்டு மல்லிகையில் மணக்கிறேன்,
எல்லாவற்றிலும் நானே ஜெயிக்க
எவரின் கழுத்தையறுக்கவும் துணிகிறேன்;

சோற்றுக்கு தெருவெல்லாம் அலைகிறேன்
எவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;
சினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை
மிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;

குழந்தைக்கு விரல்நசுங்கிச் சிரிக்கிறேன்
மருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,
காசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்
உலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;

கரியாகிப் போகப்போக பணத்தைப்
பட்டாசாக்கி வெடிக்கிறேன்,
குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;

படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,
உலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்
சாபத்தினுள் முதலாயென்னையே எரிக்கிறேன்;

மீண்டுமொரு –
பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
மயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்
மாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்
கனவுதானென்றறிந்ததும் –
கை விசமள்ளிக் குடிக்கிறேன்!!
———————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்... Bookmark the permalink.

4 Responses to 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..

  1. munu. sivasankaran's avatar munu. sivasankaran சொல்கிறார்:

    ”இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;” ”குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
    கடன்பட்டேனும் புதைக்கிறேன்;” ” படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
    பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,” யதார்த்தமான வரிகள்..!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி ஐயா. பெருநகரத் தெருக்களின் வாரிக் குவித்த குப்பைகளை எழுதி மட்டுமே என்னால் கூட்ட முடிகிறது.. எரிக்கும் சக்தியை சிந்திப்போர் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தட்டும்..

      Like

  2. Umah thevi's avatar Umah thevi சொல்கிறார்:

    அருமையான சிந்திக்க கூடிய வரிகள்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஊரிலிருக்கையில் கண்ணை உறுத்தியது மட்டுமல்ல நெஞ்சில் தைத்ததும் ஏராளம் உமா..

      ஊர்பார்த்த சந்தோசம்போலவே அங்கிருக்கும் ஜீரணிக்க இயலாவிசயங்களும் எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். என்றாலும் அது நம்மூர், நம் வீடு நாமே சுத்தம் செய்வோம்..

      Like

Umah thevi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி