Monthly Archives: ஜூலை 2013

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..

ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன் வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன், கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன் அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள் முடமாய்க் கிடக்கிறேன்; வாசலில் பூசணி உடைக்கிறேன் உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன், காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன் இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்; யாருக்கு யாரென்றுத் தெரியாமலே காதலில் உலகை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | 4 பின்னூட்டங்கள்