பிரிவுக்குப் பின் – 16

தொலைபேசியில்
பேசும்போது –
ஏதோ நீ பேச வந்ததை
பாதியில் நிறுத்தினாய்;
நாம் கடந்த இரவுகளின்
மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்;
தயவுசெய்து –
கடிதத்தில் கூட அவைகளை
எழுதிவிடாதே,
இன்னும் –
ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க
எனக்கு பலமில்லை!
——————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக