பிரிவுக்குப் பின் – 18

கவலை படாதே..
இந்த முறை
நான் ஊருக்கு வந்தால்
அங்கேயே தங்கி விடுகிறேன்;

ஏன் சிரிப்பு???

இப்படி சொல்லி சொல்லித் தான்
பத்து வருடங்களை –
இங்கேயே கழித்து விட்டேனோ;

பரவாயில்லை – வருத்தப் படாதே
நாம் தொலைத்த ஆசைகளின்
வருமானத்தில் –
நம் பிள்ளைகளின் வாழ்கையையாவது
நம்மூரிலேயே வாங்கித் தருவோம்!
———————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக