கவலை படாதே..
இந்த முறை
நான் ஊருக்கு வந்தால்
அங்கேயே தங்கி விடுகிறேன்;
ஏன் சிரிப்பு???
இப்படி சொல்லி சொல்லித் தான்
பத்து வருடங்களை –
இங்கேயே கழித்து விட்டேனோ;
பரவாயில்லை – வருத்தப் படாதே
நாம் தொலைத்த ஆசைகளின்
வருமானத்தில் –
நம் பிள்ளைகளின் வாழ்கையையாவது
நம்மூரிலேயே வாங்கித் தருவோம்!
———————————————————–
























