திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!

என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு,

என் காத்திருப்பில் பூத்த
பரிமளமே!

என் கனவுகளை சுமக்க
உறவுற்ற உயிரே!

நான் வாழாத நாட்களில் தேடிய
தேடலின் அர்த்தமே!

இனி என் மீத நாட்களின்
சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….!

சந்தமுள்ள காதலியே…
சலங்கை குலுங்கிய தமிழ்
பேச்சழகே! வா…!

இதோ-என் வாழ்வின்
புதுமைகள் –
நீ கால் பதித்த இடத்திலிருந்து
பூக்க உள்ளது … வா…!

நாட்களாய் மணிகளாய்
நிமிடமாய் நொடிகளாய்
காற்றில் கரைதலின் மிச்சத்தில்
நீயும் நானும் சேர்ந்திருப்போம்… வா…!

முதன் முதலாய் உன் பார்வை
முதன் முதலாய் உன் தொடுதல்
முதன் முதலாய் உன் முத்தம்
முதன் முதலாய்-முதலாய்-முதலாய் உன்னில்
நானாக – நான் கரையப் போகும்
கனப் பொழுதுகளுக்காய் – காத்திருக்கிறேன்… வா…!

நீ நானாகவும்
நான் நீயாகவும்
நமக்குள் நம்மை தொலைத்து
உயிரற்று போகும் வரை தேடுவோம்… வா…!

உலக சமாதானத்தின் கொடி
நம் உறவின் நெருக்கத்தில்-
இழைத்து-திரிந்து-
காலத்தின் இன்னொரு கற்பித்தலுக்காய்
பிறப்பிப்போம் வா……!
———————————————
பரிமளக் கண்ணனுக்காக வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்!. Bookmark the permalink.

4 Responses to திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!

  1. siva's avatar siva சொல்கிறார்:

    அருமையான வரிகள்

    Like

  2. siva's avatar siva சொல்கிறார்:

    நலம் நலமறிய ஆவல்…

    Like

பின்னூட்டமொன்றை இடுக