எங்கோ –
தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;
நீயும் –
பார்த்துவிடுவாய்;
அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;
உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தப் பிறகு – சடாரென
இருவரும் –
திரும்பிப் பார்க்க நினைப்போம்;
திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.
காதல் –
செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!
























