5. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ங்கோ –
தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;

நீயும் –
பார்த்துவிடுவாய்;

அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;

உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தப் பிறகு – சடாரென
இருவரும் –
திரும்பிப் பார்க்க நினைப்போம்;

திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.

காதல் –
செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக