21. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ல்லூரியின்
சுவரெங்கும்
காதலன் காதலியின் பெயர்கள்;

நம் பெயரில்லாத
இடத்திலிருந்து துளிர்க்கிறது
உன் பெயரையும் எழுதுவதற்கான
ஆசை;

உன்னை எழுதி ஏன்
அங்கு வைக்கவேண்டுமென;
எழுதாமலேயே வந்து விடுகிறேன்,

நான் கல்லூரியின் சுவர்களில்
எழுதிடாத உன் பெயர் – எனக்குள்
காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக