Monthly Archives: பிப்ரவரி 2010

6. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நான் – வாசலில் நின்றிருப்பேனென உனக்குத் தெரியும்; நீ – வீட்டிற்குள் நின்று எனக்காகக் – காத்திருப்பாயென எனக்கும் தெரியும்; தெரிந்தும் – நான் காத்திருக்கட்டுமேயென நீ – வீட்டிற்குள்ளேயே இருப்பாய்; வெளியே – ஊர் எனை மட்டும் கிறுக்கனென சொல்லி காரி உமிழ்ந்துப் போகும் நம் காதலை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

5. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

எங்கோ – தூரத்தில் வரும்போதே உன்னை பார்த்துவிடுவேன்; நீயும் – பார்த்துவிடுவாய்; அருகில் வந்ததும் பார்க்காதவர்களைப் போலவே சென்றுவிடுவோம்; உன்னை நானும் என்னை நீயும் கடந்தப் பிறகு – சடாரென இருவரும் – திரும்பிப் பார்க்க நினைப்போம்; திரும்பிப் பார்க்காமலேயே செல்வோம். காதல் – செந்தீயென இருவருக்குள்ளும் எரியும்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

4. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ – ஒருமுறை கை குலுக்கிய அந்த இறுக்கத்தின் அழுத்தத்தில் தான் இதயம் – எழுந்து நின்று செய்தது காதல்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

3. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் – முட்டைக் கண் பார்வையால் – நெட்டை கால் விரித்து உயிர் கொண்டுவிட்டது நமக்கான காதல்!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

2. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

தெருவில் நீ நடந்து செல்கிறாய்; நானும் – நடந்துச் செல்கிறேன்; பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் நீயும் நானும் யார் யாரோவென்று; உனக்கும் எனக்கும் தானேத் தெரியும் – நீயும் நானும் யார் யாரென்று!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக