Monthly Archives: பிப்ரவரி 2010

பிரிவுக்குப் பின் – 16

தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை! ——————————————————–

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 15

நாட்கள் பல கடந்த பின்பும் நான் மட்டும் – அங்கேயே நிற்கிறேன்; உன்னை- விட்டுப் பிரிந்த அந்த – கடைசி நொடிகளில்!! ———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 14

நெடுந்தூர பயணத்திற்குப் பின்னும் – உன்னைவிட்டு நான் பிரியவேயில்லை; சிரிக்கிறார்கள் சிலர் நான் – சொல்வதை கேட்டு! ————————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 13

வாழ்வின் அத்தனைத் துயரத்திற்கு மத்தியிலும்; எப்படி இனிக்கிறதோ உன் முத்தம்! ———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு; பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் – ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு – ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் – புத்தி திருத்தும் – செஞ் சூரணம் பொட்டு; ஸ்டிக்கரில் ஒளிந்து மடிந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்