ஹைக்கூ – 131

சொட்டு சொட்டான
விசமாக –
தெருவிற்கு தெரு குடியும்
பெண்களின் மோகமும்
அரசியல் சாபமும்
போலிகளின் கொண்டாட்டமும்
இன்ன பிறவும்
இன்ன பிறவும்
சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின்
வெளிச்சத்தை மீட்டுத் தர
இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும்
நீயும் நானும் –
இருந்தென்ன பயனென்று தான்
உதிர்கிறது போல்;
என் தலைமுடியில் இரண்டு!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

8 Responses to ஹைக்கூ – 131

  1. sivacbe's avatar sivacbe சொல்கிறார்:

    உண்மை, இப்போது எல்லாம் குடிக்கிறவன் தான் ஆண்பிள்ளையாம், சொல்லி கொள்கிறார்கள். குடிக்காதவன் பொட்டை இதுதான் இன்றைய தலைமுறை கலாச்சாரமாம்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      திருடன் தன்னை சரி என்று நினைத்துக் கொள்வதும், கோழைகள் தன்னை வீரனென்று எண்ணிக் கொள்வதும்.. திருந்தாத ஜென்மங்கள் திருந்த முனைபவர்களை கண்டு செய்யும் ஏளனத்திலும் நியாயம் புதைந்துப் போகாது சிவா. நல்லவைகள் பலாப்பழம் போல பழுக்க பழுக்க வாசனை ஊரெல்லாம் கமழும். தவறுகள் கெட்டுப்போன உணவுகளை போல தான் கெட்டுவிட்டதை தானே நாள்பட நாள்பட தன் துர்நாற்றத்தாலே உலகத்திற்கு பறையடித்து சொல்லிவிடும்.

      நன்மை தீமைகளை ஓர்தினம் தீர்ப்பாய் சொல்லும் உலகம் நம்மை எல்லோரையும் அகலக் கண் கொண்டுப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது மனோ. நம் நன்மைகளை நாளைய உலகம் பேச விட்டாலும் வரலாறாவது பேசும். நம்பிக்கையோடு பிறருக்கெந்த வருத்தத்தையும் தராமல் இயல்பில் சரியாக இருக்கவே முயற்சிப்போம்!

      Like

  2. பிரகாஸ்'s avatar பிரகாஸ் சொல்கிறார்:

    சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின்
    வெளிச்சத்தை மீட்டுத் தர
    இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும்
    நீயும் நானும் –

    -இந்த காலத்துக்கு தேவை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நானும் எத்தனையோ இடத்தில் தவறாக இருக்குமிந்த சமுதாயத்தில் யாரை கைகாட்டிச் சொல்ல சகோ? என்னை நானே சொல்லிக் கொள்ளும் விதமாய், தவிர, யாருக்கு வலிக்க வேண்டுமோ அவர்களுக்கு வலிக்கும் விதமாய், சற்று சிந்திப்பார்களே என்றெண்ணி நம் இன்றைய சமுதாயத்தின் ஒருசாரார் மீதெழுந்த வருத்தத்தில் புனைந்தது. தங்களின் ஆமென்ற அங்கீகாரத்திற்கு நன்றி சகோ!

      Like

  3. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    வணக்கம் வித்யா

    ஒரு வாரமா உங்கள் கவிதைகளின்ரி சற்று ஏங்கித் தான் போனேன்.

    நம் சமுதாயகேடுகளின் வெட்ட வெளிச்சம் தாமஸ் ஆல்வா இன்றியே உங்கள் கவிதையில் பளிச்சிடுகிறது!!!!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் மனோ,

      அத்தனை ஆழமான அன்பு கொண்டுள்ளீர்களா. மன்னிக்கவும் மனோ, இனி உங்களுக்காகவேனும் தொடர்ந்தெழுத முயற்சிக்கிறேன். மடிக் கணினி இருந்தும் கூட பயன்படுத்த இயலாதவாறு எங்கெங்கோ சுற்றினோம் . குவைத், துபாய், கொலம்போ, கோலாலம்பூர், சிங்கப்பூர், மீண்டும் மலேசியா ஜோஹூர்பாரு, லங்காவி தீவு, மீண்டும் சிங்கபூர், மீண்டும் குவைத்தென எப்படியோ வந்தடைந்து விட்டோம், அதே எந்திர வாழ்க்கைக்குட்பட.

      சிங்கப்பூரில் மலேசிய மக்களிடமிருந்து கற்ற பாடம்: சட்டங்கள் மனிதனை மனிதத்தோடு வாழ்விக்கவே என்பதை!

      Like

  4. shankarp071's avatar shankarp071 சொல்கிறார்:

    அருமை!

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி