18 எப்படியோ நிகழ்கிறது காதல்..

உனக்கு ஒரு
கடிதமெழுதினேன்..

கடிதத்தின்
வார்த்தைகளில் எங்குமே
காதலில்லை
காதலிப்பதாய் சொல்லவில்லை

காதல், அக்கறை மிக்கதெனில்;
என் அக்கறையையும்
காதலென உணர்க!!
———————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 18 எப்படியோ நிகழ்கிறது காதல்..

  1. Renuka's avatar Renuka சொல்கிறார்:

    //உனக்கு ஒரு
    கடிதமெழுதினேன்..

    கடிதத்தின்
    வார்த்தைகளில் எங்குமே
    காதலில்லை
    காதலிப்பதாய் சொல்லவில்லை

    காதல், அக்கறை மிக்கதெனில்;
    என் அக்கறையையும்
    காதலென உணர்க!!//

    That was an excellent poem….There must be someone behind ur poems:)… I have taken one of ur article in my Nilavaram program two weeks back….Will include some more when i get a chance….

    Renuka.

    இது, போற்ற தக்க கவிதை. இந்த கவிதைக்குப்பின் யாரோ நிச்சயமாக இருக்கிறார்கள்.

    இரண்டு வாரத்திற்கு முன் என் ‘நிலவரம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தங்களின் படைப்பினை பயன்படுத்தினேன். வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக நிறைய சேர்ப்பேன்.

    றேனுகா..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      *அன்பு றேனுகாவிற்கு,*

      தற்போதெல்லாம், காதல் என்ற உணர்வு பெருத்திருத்தலில், காதல் கவிதைகளை பெரிதாய் நிறைய பேர் விரும்புவதன் காரணமாக, ஏன்; காதலில் கூட ஒரு நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி, காதல் பற்றிய நல்ல சிந்தனைகளை கொடுக்க கூடாதென்றே, இக்கவிதைகள் எழுதப் படுகின்றன. என் இளைய சமுதாயம் திரிக்கப் படும் காதலின் தவறான நோக்கம் கொண்ட உணர்வுகளில் விழுந்து விடக் கூடாது என்பதே என் நோக்கம்.

      நம் கவிதைகள் உங்களால் தொலைகாட்சி நிகழ்வுகளிலும் பயன்படுத்தப் படுகிறதெனில் அது மகிழ்விற்குரியது தானே. மிக்க நன்றிகள் பல *றேனுகா!*

      Like

பின்னூட்டமொன்றை இடுக