ஓடி வந்து
மூச்சிரைக்க உன்னருகில்
வந்து நின்றேன்
என்ன என்றாய்
இதோ இது ஒரு புது நாவல்
சாண்டில்யன் எழுதியது
படி என்றென்..
“ஹே….
கள்ளா..
பொய் தானே சொல்ற –
உள்ளே என்ன
காதல் கடிதமா…??!!!” என்றாய்…
எழுதி வைக்காமல் போனேனே என
மனசு அப்படி துடித்தது!
—————————————————
























