33 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

றக்கத்தை துளைத்தேனடி
உண்பதும் மறந்தேனடி
பித்தனாய் அலைந்தேனடி – உனை
நினைப்பதொன்றையே ரசித்தேனடி;

உன் நினைவுகளின் ஈரத்தில்
இதயம் நனைந்தேனடி
உன் இமையின் அசைவில்
தொலைந்தேனடி;

உன் உடம்பின் வளைவுகளில்
வீழ்ந்தேனடி
பின் ஒரேயொரு புன்னகையில்
உயிர்த்தேனடி;

வார்த்தைகளில் காதலை
வடித்தேனடி
காதலை சொல்ல கூட
கவிதையாக மட்டுமே
கறைந்தேனடி!
——————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 33 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

  1. sarala's avatar sarala சொல்கிறார்:

    மோனையில் ஆடி சந்தத்தில் திளைகிறது உங்கள் கவிதை பெண்
    காதல் ரசத்தில் ஊறிய வார்த்தைகள் அருமை ………

    Like

பின்னூட்டமொன்றை இடுக