Monthly Archives: ஜூலை 2010

34 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

என் மொத்த உணர்வின் வெப்பத்தில் – மொழியை பூத்தவளே.. வா.. உன் தனிமையை விரட்டி தாகமொழிப்போம், சுடும் நெருப்பில் ஊற்றிய நீர் போல ஒரு சின்ன சிரிப்பில் கலப்பில் – புன்னகையாய் மலர்வோம் வா.. ————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உறக்கத்தை துளைத்தேனடி உண்பதும் மறந்தேனடி பித்தனாய் அலைந்தேனடி – உனை நினைப்பதொன்றையே ரசித்தேனடி; உன் நினைவுகளின் ஈரத்தில் இதயம் நனைந்தேனடி உன் இமையின் அசைவில் தொலைந்தேனடி; உன் உடம்பின் வளைவுகளில் வீழ்ந்தேனடி பின் ஒரேயொரு புன்னகையில் உயிர்த்தேனடி; வார்த்தைகளில் காதலை வடித்தேனடி காதலை சொல்ல கூட கவிதையாக மட்டுமே கறைந்தேனடி! ——————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

32 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உனக்காக காத்திருந்த தருணங்கள் எனை கொண்று போட்ட கவலையில் கடந்து – விடைகொள்கின்றன; உனை மனதில் சுமக்கும் கனம் கூட சுடும் தீயென தவிக்கையில் – காத்திருப்பு ஒரு சுடும் நெருப்படி பெண்ணே. கீறி அறுத்து இதயத்தில் இருக்கும் உன் முகம் காட்ட துடிக்கின்றேன், வார்த்தைகளால் உடைத்தாவது உன் நினைவுகளை- கவிதைகளால் வடிக்கின்றேன், யாரிடமும் சொல்லாமல்கூட … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உன் பள்ளிக் கூடத்து வாசலில் வீழ்கிறது என் பார்வை. நீ வெளிவரும் நேரமோ என்று வாசல் நோக்கி நின்று விட்டேன். வெள்ளை சட்டை நீள பாவாடை. தேவதைகளை தோற்கடித்துவிட்டு நீ நடந்து வருகிறாய். வயது தாண்டி கற்பனை செய்ய துணியவில்லை என் மனசு, காதலிக்க மட்டும் செய்தது! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ஓடி வந்து மூச்சிரைக்க உன்னருகில் வந்து நின்றேன் என்ன என்றாய் இதோ இது ஒரு புது நாவல் சாண்டில்யன் எழுதியது படி என்றென்.. “ஹே…. கள்ளா.. பொய் தானே சொல்ற – உள்ளே என்ன காதல் கடிதமா…??!!!” என்றாய்… எழுதி வைக்காமல் போனேனே என மனசு அப்படி துடித்தது! —————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக