அரைகுடத்தின் நீரலைகள் – 2

போர்வீரர்கள்
யாருமே சாகாதவர்கள்
நமக்காக உயிர்தியாகம் செய்து
நம்மோடு –
வாழ்பவர்கள் என்பதை
ஒத்துக் கொள்ளும் நாம்
எப்படியோ
எதிரி நாட்டின் வீரர்களை மட்டும்
கொண்று விட்டதாகவே சொல்லி
வெற்றிக் கொடி ஏற்றுகிறோம்!

கொடியில் தெரியாத ஒரு உயிர்
வண்ணங்களுக்கிடையே கலந்து
இறந்த எல்லோரையுமே
நினைவில் கொண்டுக் கொள்கிறது!!
——————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரைகுடத்தின் நீரலைகள் – 2

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி