18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

ன் வாழ்க்கை கதைநூறு சொல்லும்
முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும்,
காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும்
தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்!

வானம் தொடுங் காலம்வரை
சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்;
எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு
தோல்விசாசனம் எழுதிப் போனாய்!

மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை
ஓயாது எம் ரத்தம், வெட்டி சுக்குநூறாய் போட்டாலும்
குண்டு பல பொழிந்தாலும் –
இறக்க இறக்க பிறக்குமெம் இனம், அது நீ கொடுத்த சினம்!

ம் தமிழர்களை தின்று குவித்த மண்ணில்
ஒர்தினம் வென்றுகுவிப்போம்;
வென்றுகாட்டிய வெற்றிகளை உம் போன்ற
வீரமறவர்க்கே; துயிலம் – சென்றுகுவிப்போம்!

துவரை, மூச்சில் நீ சுமந்த சுதந்திர வேட்கையை
உன் சுவடுகள் காற்றினில் கலந்து தரும்,
எமை வஞ்சித்து; அழித்திட்டதாய் நகைக்கும் பகைவர்க்கு
நீ சொல்லிச் சென்ற பாடங்களே நீதியை புகட்டித் விடும்!

வாழ்வின் அசாதாரன சந்தர்ப்பங்களில் – வெற்றியாய் துளிர்த்த
உன் வீரம், விரைந்து எம் மண்ணின் விடிவாய் விடிந்துவிடும்;
அநீதிக்கு துணைபோன வல்லமை தேசத்தை – அன்று நீ
திருப்பி விரட்டிய பயம் – இன்றும் எதிரியை கொன்று போடும்!

வாழ்வின் பாதியை அல்ல, நீ உலகம் பார்க்க துவங்கியதே
ஈழத்து சுதந்திரப் போரில் அல்லவா,
உனக்காய் வாழும் நாட்களை எல்லாம் – நீ
எமக்காய் வாழ்ந்த – உலகறியா விடுதலை தியாகியல்லவா!

ன் வெள்ளை சிரிப்பில் கூட ஒரு தீயுண்டு
அது அன்பிற்கு உடன் எரிகையில் வெளிச்சமாய் பரவியது
ஆணவத்தின் எதிரே எரிகையில் – எதிரே நின்றவரை
வீரமாய் நின்று கொளுத்தியது!

னி உன் வெள்ளை தீயின் விடுதலை வேட்கை
எம் நெஞ்சில் எரியுமையா;
அது அடங்கும் நாள் – எம் மண்ணில் நீ கேட்ட
சுதந்திரம் கிடைக்குமையா!

காலத்தை எத்தனை ஏமாற்றி வஞ்சித்தாலும்
வெற்றி ஓர்நாள் கிடைப்பது காலத்தின் உறுதியையா –
அந்த வெற்றியை தாங்கும் கொடி; அன்று உன்
உழைப்பையும் தியாகத்தையும் சுமந்தே பறக்குமையா!!
——————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

  1. தமிழ்த்தோட்டம்'s avatar தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    //காலத்தை எத்தனை ஏமாற்றி வஞ்சித்தாலும்
    வெற்றி ஓர்நாள் கிடைப்பது காலத்தின் உறுதியையா –
    அந்த வெற்றியை தாங்கும் கொடி; அன்று உன்
    உழைப்பையும் தியாகத்தையும் சுமந்தே பறக்குமையா!!//

    உண்மை வரிகள் அனைத்தும், தூங்கி இருக்கும் தமிழ் உணர்வை மீண்டும் மீண்டும் எழுச்சியடை செய்கிறது உங்கள் கவி வரிகள்..

    வெற்றி பெறும் நாள் வெகு விரைவில்

    தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தமிழ்த்தோட்டம், மாவீரர்களின் உழைப்பையும் தியாகத்தையும் வீரத்தையும் அடக்க நம் கவிதைக்கு அத்தனை ஊட்டமில்லை. இயன்றதை அந்த விதைகளின் வேரிற்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறது நம் எழுத்துக்களும்!!

      Like

  2. Venkadesan's avatar Venkadesan சொல்கிறார்:

    அருமை அண்ணா… எழுச்சியூட்டும் வரிகள்… இதைப் போன்று நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம்… பிரபாகரன், பாலசிங்கம் அவர்களுக்கு அடுத்து புலிகள் என்றால் என் நினைவில் ஆழப் பதிந்தவர் தமிழ்ச்செல்வம்… அதற்கு அவரது உற்சாகமூட்டும் புன்னகையே ஒரு காரணம்… மாவீரர் தினத்தை நோக்கி…..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; கண்டிப்பாகப்பா.., நேரம் கிடைக்கையில் அல்ல ஒதுக்கியேனும் ‘இவர்களுக்கான எழுத்துக்கள் என்னுள் இருந்தும்’ பிரவாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.. உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி என்னருமை தம்பி!!

      Like

Venkadesan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி