உடைந்த கடவுள் – 18

கம்கடித்து
துப்புவதாகவே
எண்ணிக் கொள்கிறார்கள்
நிறையபேர் –
பிறரின் உணர்வுகளை;

உணர்வுகள் கண்ணீராய் ஊறி
காய்ந்துவிடுவதாகவே எண்ணம்
அவர்களுக்கு.

பிறரின் மன வடுக்கள்
பிறருக்கு –
முழுதாக தெரிவதேயில்லை!
—————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக