தங்கத்தில் தொங்கட்டான்
வைரத்தில் மூக்குத்தி
பத்து சவரத்தில் தாலி சரடு
வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும்
பித்தளையில் அண்டாவும் வாலியும்
போதா குறைக்கு –
மாப்பிள்ளைக்கு வண்டியும்
ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து
திருமணம் செய்து வைத்த அப்பாவின்
வட்டிப் பணத்தை –
கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால்
கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!!
—————————————————————–
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,600
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.



















திருமண வயதுவரை தன்னை ஆளாக்கி, நித்தமும் கேட்டவற்றை முகம் சுளிக்காமல் வாங்கி கொடுத்து மனம் கோணாமல் நடந்துகொண்டனர் நாளைக்கு நமக்கு ஒருவேளை கஞ்சி தராவிடிலும் இந்த உலகம் வியக்க வாழவேண்டும் நம் பிள்ளை என்று நினைத்த அந்த நடமாடும் தெய்வங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறோம் பெண்களாக பிறந்ததற்கு உண்மையில் வேதனைப்படும் தருணங்களில் இவையும் ஓன்று .
உங்களை போன்று எல்லா ஆண் மக்களும் இந்த வலியை வேதனையை உணர்ந்தார்கள் என்றால் நாளைய சமூகம் சமதுவபுரமாய் காட்சியளிக்கும்.
பெண்ணின் வலி உணர்ந்த வரிகள் ஒரு ஆணின் எழுத்தில் கண்டத்தில் ஆனந்தபடுகிறேன். மனதார நன்றி சொல்லுகிறேன் உங்களுக்கு
LikeLike
பொதுவாக ஒரு ஆண் குழந்தை மூத்தவனாக இருக்கும் வீட்டில் அவன் சற்று வளர்ந்ததும் அப்பாவிற்கு உதவியாக இருப்பதுண்டு, அதே எண்ணம் படிக்கும் லட்சியத்தில் வளரும் பெண்களுக்கு ஏன் இருக்கக் கூடாது. நான் படித்து பெரிய ஆளாகி அம்மாவிற்கு புடவை வாங்கித் தருவேன், அப்பாவிற்கு வேட்டி வாங்கி தருவேன் எனும் ஆசை ஒரு பெண்ணிற்கும் இருக்கும் இல்லையா.
அதையெல்லாம் மூடி; அப்பா படும் துன்பமெல்லாம் கண்டு; வட்டிக்கு வாங்கி செய்த திருமணத்தில் கணவன் வீடு சென்றும் அங்கே குறை சொல்லி சண்டை போடும் வீடுகள் இன்றும் நிறைய உண்டு. அந்த சண்டைக்கு நடுவே அப்பாவின் கட்டாத வட்டிப் பணத்தின் பிரட்ச்சனையும்காதுக்கு வர ஒரு பெண்ணின் மன வலி எப்படி இருக்கும்.
இவையெல்லாம் கற்பனை இல்லை சரளா, எனை சுற்றி இருக்கும் உலகத்திலேயே நான் பார்த்தும் ஒரு வார்த்தை கூட கேட்க இயலாத மன அழுத்தம்.
செல்லம்மா கூட முதன் முதலில் நம் வீடு வருகையில் சொல்லும், நான் பெரிய அலுவல் அதிகாரியா ஆக நினைத்தேன் என்று, நான் மறுக்க வில்லை, அவர் போகவும் இலை, அவரை வேலைக்கனுப்பி சம்பாரிக்கவோ, என்னை போல் அவதி பட்டு வரவோ விரும்பவுமில்லை. என் வருத்தமெல்லாம், நம்மை போல் அல்லாது, வரதட்ச்சனைக்கென சண்டை இடும் வீடுகளும், கொடுக்க முடியாத வீடுகளும், கொடுத்துவிட்டும் கடனடையாத அப்பாக்களும், அதை அடைக்க தன் வாழ்க்கையை எங்கேனும் வெளிநாடுகளில் தொலைக்கும் அண்ணன்களும் தம்பிகளும், கணவனையும் இழந்து பெண்களை கட்டித் தர அவதியுறும் அம்மாக்களும் தான்!
LikeLike