Monthly Archives: ஜூலை 2010

10 ஓ………. உலக தமிழினமே..

கர்ப்பிணி பெண்களின் வயிறு கிழித்து தமிழனென்பதால் சிசுவை கூட கொண்றுபோட்ட சிங்களரா தமிழரை காப்பர்? ஓ………. உலக தமிழினமே வெட்கம் கொள்ளாதே அவன் காலுக்கு செருப்பினும் கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில் முடிந்தால் சற்று கோபப் படு; யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!! ————————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

9 கேட்ட கதையும்; கேட்காத பாடமும் – கரும்புலிகள்!!

கரும்புலிகள் கதை கேளு மரணமெல்லாம் தூசி பாரு, ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு; கரும்புலிகள் உதிரம் பூத்து கடல்கூட அழுது சிவந்தது பாரு – உயிரும் வருடமும் பல; பலிகொடுத்தும் ஈழம் மட்டும் – இலங்கையாச்சி பாரு; மில்லர் போல பலபேரின் இலட்சியக் கனவு சாமாதியில் பாரு – கமலுக்காக ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

8 பிணமென்றே பெயர் வைத்தேன்

   பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்;   பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்;   பிணங்களின் முறிந்த உறுப்பில் முடங்கின உயிர் பறித்த வலி;   பிணங்களின் தெருவோர குவியலில் அறுந்தன உயிரின் ஆசை;   பிணங்களின் பிணமென்னும் பெயரில் கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;   பிணமென்றே பெயர்வைத்தேன் வேறென்ன … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!

   பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள். அதும் ‘குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை’ என ஆங்காங்கே விளம்பரம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 55 பின்னூட்டங்கள்

12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..

என் இனியவளே வார்த்தைகளில் மெல்ல மெல்ல இதயம் தொட்டவளே, உள்ளிருக்கும் காதலுணர்வை பார்வையால் ஈர்தவளே, காலத்தின் வழி தடத்தில் – எனக்குமாய் உதித்தவளே, உன் வாழ்நாளில் ரசனைகளில் என்னையும் சேர்த்தவளே.. வா.. உன்னில் பதிந்த ஒரு நினைவெடுத்து கவிதைகளாய் பூப்பிப்போம்; உன் மௌனத்தின் புன்னகை உடைத்து – காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக