Monthly Archives: ஜூலை 2010

உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

‘எப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர் ‘ஏன்’ என்றேன் ‘சரி என்ன சொன்னால் கோபப் படுவீர்கள் என்றார் ‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென் ‘அப்போ உங்களுக்கு கோபமே வராதா’ என்றார் ‘நான் சொன்னேனா’ என்றென் ‘அப்போ கோபப் படுவீர்களா’ என்று கேட்டார் ‘படலாம்’ என்றேன் ‘கோபப் அப்டுவீங்களா?!!! கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

3) GTV – இல் நம் ‘மனிதத்தை மண் தின்ற நாள்’ கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு…. உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும். நன்றி. என்றென்றும் வாழ்த்துக்களுடன் றேனுகா

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அன்பு தம்பி விஜய ரூபனுக்கு வாழ்த்து!

மனசார அன்பை விதவிதச்சி என் மனசெல்லாம் விதைச்ச தம்பி, கவிதை படிச்ச அன்பால உடன் பிறக்காமல் உற்ற தம்பி; வானம் போல மனசால ஞானம் – கூட நிரஞ்ச தம்பி, இனம் காக்கும் உணர்வுள்ள எழுச்சிக் குறையா நல்ல தம்பி; இணையத் தாய் கொடுத்த உறவில் ஈழ மண்ணை போற்றும் தம்பி என் இனம் காக்க … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 30

உண்ண உணவில்லாதவர்கள் கோல்கேட் பற்பசை பற்றியோ குச்சி வைத்தாவது பல் துலக்காதது பற்றியோ வருத்தம் கொள்வதேயில்லை’ என்று குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே நம் சமுதாய பற்று – மனம் நிறைந்து கொள்கிறது! ———————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 29

தெரு வுடைத்து தார் பிரித்து ஜல்லிகள் நிரப்பி வேர்வையில் ஊறிப் போகும் தொழிலாளிகளின் கால் வெடிப்பும், வயிற்றுப் பசியும், தெருவோர தூசிகளில் தூளிகட்டி – கிழிந்த புடவியின் வழியே அம்மா வருவாளா தூக்கிக் கொள்வாளா எனப் பார்க்கும் ஏக்கத்தின் தடங்களும் தன் அடையாளங்களை நல்ல தார்சாலையாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன! ————————————————————————

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக