பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

ங்கே எங்கே ஓடுற
யாரைப் பார்த்து ஓடுற
பேயைக் கண்டு நடுங்குற; நீ
சின்னப்பொய்யில் அடங்குற,

சுட்டிபையன் காதுல
சுத்தினது பேயிதான்
பெரியவனா ஆனதும்
பயத்தைமூட்டும் பேயிதான்.,

கண்ணைமூடி காட்டுல
கயிறுகட்டில் வீட்டுல
அடுப்புமூளை முடங்கின
பூனை கூட பேயிதான்.,

கட்டுக்கதைய விட்டுடு
கண்ணைத் திறந்து பார்த்திடு
இருட்டில் விளக்கை ஏற்றிடு
வெளிச்சத்தையே நம்பிடு..

வெள்ளிக்கொம்பு பல்லில்ல
வெளிய நீட்டும் நாக்கில்ல
அத்தனையும் பொய்யுடா; இது
அந்தக் காலமில்லைடா..

யாரு சொன்னா என்னடா
நீ எதிர்த்துநின்னு யோசிடா
அப்புறமா பாரடா – அட
அசைந்தது உன் நிழலுடா..
———————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

  1. கருத்துள்ள அழகான பாடல் ஐயா…

    Like

  2. Umah thevi's avatar Umah thevi சொல்கிறார்:

    அருமை!

    Like

பின்னூட்டமொன்றை இடுக