38. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ரிவிடு –
நீயும் நானும்
காதலிக்கிறோமென்று
வைத்துக் கொள்;

ஏன்????
இல்லையேல் இறந்து
போவேனென
பயந்துப் போனாயோ?

இல்லை இல்லை
காதலுக்கு முடிவு
இறப்பில்லை என்பதை
புரிந்தவன் நீ.

வேறென்ன?

உன்னை பார்த்துக் கொண்டே
செல்லும் வேறு
நிறைய கண்களை
வேறு எந்த
தீயிட்டு எரிப்பது?

இதற்கென்ன அர்த்தம்?

அக்கறை.

காதலால் அக்கறை கொள்கிறாய்???

ஆம்; அக்கறையும்
அன்பும் மட்டுமே காதலெனில்
நானும் காதலிக்கிறேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

2 Responses to 38. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. விஜய்'s avatar விஜய் சொல்கிறார்:

    ந‌ட்பையும் காத‌லிக்க‌லாமே…

    Like

பின்னூட்டமொன்றை இடுக