மனிதன் செய்யும்
தவறுகளில் –
கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு
கடவுள் தோற்கடிக்கப் பட்டு
கடவுள் குறை சொல்லப் பட்டு
கடவுள் குற்றம் சாட்டப் பட்டு
கடவுள் மறுக்கப் பட்டு
கடவுள் சபிக்கப் பட்டு
கடவுள் உடைந்து தான் போனார்.
மனிதன்
உடைக்கவில்லை என்கிறான்;
கடவுள் மனிதனை
‘உடைத்ததாக சொல்வதேயில்லை.
கடவுள்
கடவுளாகவே இருக்கிறார்!!
——————————————

























.நன்றும் தீதும் பிறர் தர வாரா — என்ற முன்னவர் மொழியை – எண்ணினால், பின்பற்றினால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.
LikeLike
ஆம்; மிக சரியாக சொன்னீர்கள். நமக்கு நேரும் அத்தனை இன்னல்களுக்கும் முதல் காரணம் நாம் தான் என்பதே முழு உண்மை. அதை கண்டு அதை சரி செய்தோமெனில் பிறர் நலம் கெடுவதும், நம் நலத்தால் தவிர்க்கப் படும். மிக்க நன்றி சகோதரி..
LikeLike