பொட்டு
ஒரு விதவையின் –
நெற்றி சுடும் பொட்டு;
பெண்ணின் அடையாளத்தை
சிவந்து காட்டும் பொட்டு;
வெற்றியின் உச்சத்தை
பறையறிவிக்கும் –
ஒற்றை திலகம் பொட்டு;
குடும்ப பெண்களின் அழகிற்கு
இன்னொரு –
ஆபரணம் துறந்த அழகு பொட்டு;
நெற்றிக் குளிர்ச்சியில் –
புத்தி திருத்தும் –
செஞ் சூரணம் பொட்டு;
ஸ்டிக்கரில் ஒளிந்து
மடிந்து போன –
கலாச்சார சீர்குலைவு பொட்டு;
பத்தோ இருபதோ காசுக்கு
பிழைப்பு நடத்தும் ஏழைகளின்
ஒற்றை வியாபாரம் பொட்டு;
உலக வளர்சிக்கிடையே
நீட்டியும்
சுருக்கியும்
குறுக்கியும்
வண்ண வண்ணமாய் ஒளிர்ந்துக் கொண்டாலும்
பழைய சாந்து பொட்டின் வாசனையால் –
நாசிகளை நனைத்துக் கொண்டே மறைகிறது – பொட்டு!
————————————————————————-
வித்யாசாகர்

























very nice
LikeLike
உங்களின் இரண்டே வார்த்தைகளில்
உலக கனவு சுமக்கும் மனசு –
நிறைந்து தான் போகிறது. மிக்க நன்றி உமா!
LikeLike
இட்டுவிடும் விரலோடு ஒட்டிக்கொள்கிறது…..உறவு.
LikeLike
ஆழமாமான சிந்தனை உள்ள பதில். ஆம்; ஒட்டிக் கொண்டதில் கெட்டிப் பட்டும், ஒட்டி-விட்டதில் கேடுகெட்டும் தான் போகிறது உறவு. பொட்டு எதற்கும் காரணமில்லாமல் மனிதனை பார்த்து பார்த்துதான் சிவந்துபோகிறது போல்!
உங்களை போன்றோரின் வரவில் பெருமை கொள்ளுமென் எழுத்துக்கள். மிக்க நன்றி சிவசங்கரன்!
LikeLike