ஞானமடா நீயெனக்கு – 35

உனை –
சற்று வளர்ந்ததும்
கடைக்கு அழைத்துச் சென்றேன்,

நீ குழந்தை பொம்மை
எடுத்தாய்
வீடெடுத்தாய்
வண்டிகள் எடுத்தாய்
நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய்,
மிதிவண்டி சொப்புகளென – என்னென்னவோ
எடுத்தாய்,

எல்லாவற்றையும் பார்த்து
துள்ளி குதித்தாய் –
சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால்
முடியாதென்று
அழுதாய் –

அவைகளை எல்லாம் பிடுங்கி
கடையிலேயே வைத்துவிட்ட
என் ஏழ்மை –
உனக்கு அவைகளை எல்லாம்
காட்டிவிட்டு மட்டும் வந்து
வீட்டில் அமர்ந்து அழுதது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக