Daily Archives: மே 25, 2010

பல நூற்றாண்டுகளுக்குப் பின்..

ஒரு தேசம் மலர்கிறது… ஜாதி கொடுமைகளில்லை மத வெறியில்லை எந்த பிரிவின் பாகுபாடுமில்லை பொறாமையில்லை கொடும் மரணம் கொலைகள் இல்லை எல்லாம் கடந்து இயற்கையாய் இயல்பாய் விரியும் மலரினை போல் ஒரு தேசம் பொதுநலங்களில் பூத்து சிரிக்க மலர்கிறது; இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும் நேசம், அன்பை இயல்பாய் பொழியும் மனசு, விருப்பத்தை புரிந்து அலசி ஆராய்ந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

58 ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள்; ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

57 ஒரு தமிழனின் கனவு!!

அண்ணன் தம்பி அம்மா அப்பா பிள்ளை மனைவி யாரையும் இழந்த எம் உறவுகள் – ஈழத்தை இழக்க மட்டும் தயாரில்லை!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

56 ஒரு தமிழனின் கனவு!!

சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு – வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத் தானே இத்தனை போராட்டமென அறுபது வருடம் தாண்டியும் புரிந்துக் கொள்ள வில்லை உலகம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

55 ஒரு தமிழனின் கனவு!!

கைவீசி நடந்த அதே தெருவில் – கைகால் முடமாக்கப் பட்டு கிடக்கிறேன் – பரவாயில்லை; எக்காரணம் கொண்டும் எம் விடுதலை உணர்வை முடமாக்கிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக