Daily Archives: மே 21, 2010

பிரிவுக்குப் பின் – 82

இன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 81

தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 80

நிறுவன ஒப்பந்தப் படி என் – உறவுகள் தொலைந்த பாலை நிலங்களில் இரண்டு வருடங்களை தொலைத்தாகி விட்டது; இன்று ஊருக்கு வர என் கடவுச் சீட்டினை கூட பெற்றுக் கொண்டேன்; இன்னும் சற்று நேரத்தில் என் இரண்டு வருட ஆசைகளும் விமானமேறி – நாளை தரையிறங்கும்; வானம் விடிகையில் வாசலில் நீ நிற்ப்பாய், ஓடி வருவாயோ … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 79

எத்தனையோ பூக்களுக்கு மத்தியில் சிரிக்கும் ஏதோ ஒரு அதிசய பூவிலிருந்து தான் துவங்குகிறது அத்தனை ஆண்களின் வாழ்க்கையும்; எனக்கும் நீ அப்படித் தான் – இடையே சற்று பிரிவென்னும் முட்களோடு!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 78

நீயும் நானும் தெருவில் நடக்கையில் – நீ என் கை பிடித்து வருவாய், உள்ளுக்குள்ளே – ஆயிரம் தேவதைகள் கூட நடப்பது போல் உணர்வேன்; இங்கும் நான் தனியே நடக்கையில் நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து என் கை பிடித்துக் இழுக்கிறாய்; நான் திரும்பிப் பார்ப்பேன் – நீ மட்டும் தெரிவதேயில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக